'விண்ணைத்தாண்டி வருவாயா', 'பாணா காத்தாடி', 'மாஸ்கோவின் காவிரி' படங்களில் நடித்தவர் சமந்தா. அவர் கூறியதாவது: 'விண்ணைத்தாண்டி வருவாயா' தெலுங்கு பதிப்பில் த்ரிஷா கேரக்டரில் நான் நடித்தேன். அதன் ஹிட்டுக்குப் பிறகு அங்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால், அதே கேரக்டர் போலவே இருந்ததால் பல வாய்ப்புகளை மறுத்தேன். இப்போது ஜுனியர் என்.டி.ஆருடன் 'பிருந்தாவனம்' படத்தில் நடித்துள்ளேன். இதில் வித்தியாசமான நடிப்பை வெளிபடுத்தி உள்ளேன். இதையடுத்து மகேஷ்பாபு ஜோடியாக 'தூக்குடு' என்ற படத்தில் நடிக்கிறேன். இப்போது தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். தமிழ் படங்களில் நடிக்கவில்லை. இவ்வாறு சமந்தா கூறினார்.
Source: Dinakaran
Post a Comment