Ôஇன்னொரு நடிகரின் படத்துக்கு டப்பிங் பேச மாட்டேன்Õ என்ற பாலிசியை வைத்திருந்தார் மம்மூட்டி. சில படங்களுக்கு, வேறொரு நடிகருக்காகவும் திரையில் பின்னணியில் மட்டுமே ஒலிக்கும்படியும் டப்பிங் பேச அவரை கேட்டனர். மறுத்துவிட்டார். இப்போது ப¤ருத்விராஜ் நடிக்கும் Ôஅன்வர்Õ படத்தில் டப்பிங் பேச சம்மதித்துள்ளார் மம்மூட்டி. காரணம், நட்பு. பிருத்விராஜ், மம்மூட்டியின் நண்பர். அதே போல் இப்பட இயக்குனர் அமல் நீரத், இதற்கு முன் மம்மூட்டி நடிப்பில் Ôபிக் பிÕ படத்தை இயக்கியவர். அவர்கள் இருவரும் கேட்டதால் டப்பிங் பேச சம்மதித்துள்ளார். படத்தின் ஆரம்பத்திலும் கடைசியிலும் மம்மூட்டியின் குரல் திரையில் பின்னணியில் ஒலிக்கும்.
Source: Dinakaran
Post a Comment