தயாரிப்பாளர் மீது மோனிகா புகார்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

Ôகவுரவர்கள்Õ படத்தில் நடித்ததற்காக தனது சம்பள பாக்கி ரூ. 2 லட¢சத்தை தரவில்லை என தயாரிப்பாளர் மீது நடிகை மோனிகா புகார் அளித்துள்ளார். சஞ்சய்ராம் தயாரித்து, இயக்கியுள்ள படம் Ôகவுரவர்கள்Õ. சத்யராஜ், விக்னேஷ், மோனிகா நடித்துள்ளனர். இப்படம் நாளை திரைக்கு வருகிறது. மோனிகாவுக்கு பேசப்பட்ட சம்பளத்தில், ரூ. 2 லட்சத்தை ஷூட்டிங்கிற்கு பின் வழங்குவதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவித்து இருந்தார்களாம். ஆனால் படம் ரிலீசுக்கு தயாரான நிலையில் சம்பள பாக்கியை தரவில்லை என சஞ்சய் ராம் மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் மோனிகா.
இது பற்றி மோனிகா கூறியதாவது: பட ஷூட்டிங் முடிந்ததும் டப்பிங¢ பேசுவதற்கு முன்பே சம்பள பாக்கியை கேட்டேன். டப்பிங் முடிந¢ததும் தருவதாக சொன்னார்கள். டப்பிங் முடிந்தும் சம்பளத்தை தரவில்லை. இது பற்றி கேட்பதற்கு போன் செய்தால் போனை சஞ்சய் ராம் எடுப்பதே இல்லை. 100 முறையாவது அவருக்கு போன் செய்திருப்பேன். ஒரு முறை கூட எடுத்து பேசவில்லை. வேறு வழியில்லாமல்தான் சங்கத்தில் புகார் செய்தேன். இப்படத்துக்கு 20 நாள் கால்ஷ¦ட் கொடுத்தேன். ஆனால் 6 நாட்கள் கூடுதலாக நடித்துக் கொடுத்தேன். அதையெல்லாம் மறந்துவிட்டு என்னை அலைக்கழிக்க வைக்கிறார்கள். இது பற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் பேசி முடிவு எடுப்பதாக நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி  தெரிவித்துள்ளார். இவ்வாறு மோனிகா கூறினார்.


Source: Dinakaran
 

Post a Comment