ஹீரோயின் ஆன சகோதரிகள்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வால்மீகி'யில் அறிமுகமான தேவிகா கூறியதாவது:
'வால்மீகி'யில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தேன். இனி அப்படி நடிக்க மாட்டேன். ஒரே படத்தில் இரு ஹீரோயின்கள் இருந்தாலும், முதல்நிலை ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன். 'ஜெயமுண்டு பயமில்லை'யில், கலெக்டர் பானுசந்தரின் மகள் வேடம். 'நெல்லை சந்திப்பு' படத்தில், போலீஸ் அதிகாரி தேனப்பன் மகளாக வருகிறேன். 'ஒரு துளி புன்னகை' படத்திலும் நடிக்கிறேன். என் தங்கை சமர்த்தியா, சென்னை கலாஷேத்ராவில் நடனம் பயின்றவர். 'விராதம்' படத்துக்கு கேட்டபோது, என்னிடம் கால்ஷீட் இல்லை. உடனே சமர்த்தியாவை ஹீரோயினாக்கி விட்டனர். அம்பிகா, ராதா போல் சகோதரிகளான நாங்கள் சினிமாவில் புகழ்பெற ஆசை.


Source: Dinakaran
 

Post a Comment