கள்ளக்காதல் காரணமாக தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தீர வேண்டி காளஹஸ்தி கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் யாகத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர் பிரபு தேவாவும் நயன்தாராவும்.
ரமலத்தை காதலித்து திருமணம் செய்து மூன்று குழந்தைகளையும் பெற்ற பிறகு, பிரபு தேவா மனம் நயன்தாராவை நாடியது. மனைவியுடன் வசிக்கும் போதே, நயன்தாராவைத்தான் திருமணம் செய்வேன் என்று அவர் பகிரங்கமாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
இதன் அடுத்த கட்டமாக, ரமலத் குடும்ப நல நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறார். பிரபு தேவா மற்றும் நயன்தாரா இருவர் மீதுமே அவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். இப்போதைய சூழலில் ரம்லத் போலீஸில் புகார் செய்தால் பிரபு தேவா-நயன்தாரா இருவருமே கைதாகும் நிலை உள்ளது.
அப்படியொரு நெருக்கடி வரும் முன்பே பிரச்சினையைத் தீர்க்க பல சமாதான முயற்சிகளையும் பிரபு தேவா மேற்கொண்டுள்ளார். எப்படியாவது சுமூக நிலையை ஏற்படுத்துமாறு, முக்கியப் பிரமுகரிடம் பிரபுதேவாவும் நயன்தாராவும் தனித்தனியாக பேசியுள்ளனர். அவரோ, இனி இந்த விஷயம் குறித்து என்னிடம் பேச வேண்டாம் என்று கோபத்துடன் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், பிரச்சினை தீர ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற காளஹஸ்தி கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் ரகசிய யாகத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர் பிரபு தேவாவும் நயன்தாராவும்.
காளஹஸ்தியில் பூஜை, யாகம் செய்தால் தீராத பிரச்சினையும் தீரும் என்பது ஐதீகம் என்பதால் இந்த ஏற்பாட்டில் இறங்கியுள்ளனராம் இருவரும்.
இந்த யோசனையை பிரபுதேவாவுக்குச் சொன்னவர்கள் அவரது தந்தை சுந்தரமும் அவர் மனைவியும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சுந்தரத்தைப் பொறுத்தவரை நயன்தாராவை அவர் மருமகளாகவே ஏற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே பிரபு தேவாவையும் நயன்தாராவையும் தம்பதிகளைப் போல அமர வைத்து தனது வீட்டில் பூஜை நடத்தியவர் சுந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது.
ரமலத்தை காதலித்து திருமணம் செய்து மூன்று குழந்தைகளையும் பெற்ற பிறகு, பிரபு தேவா மனம் நயன்தாராவை நாடியது. மனைவியுடன் வசிக்கும் போதே, நயன்தாராவைத்தான் திருமணம் செய்வேன் என்று அவர் பகிரங்கமாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
இதன் அடுத்த கட்டமாக, ரமலத் குடும்ப நல நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறார். பிரபு தேவா மற்றும் நயன்தாரா இருவர் மீதுமே அவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். இப்போதைய சூழலில் ரம்லத் போலீஸில் புகார் செய்தால் பிரபு தேவா-நயன்தாரா இருவருமே கைதாகும் நிலை உள்ளது.
அப்படியொரு நெருக்கடி வரும் முன்பே பிரச்சினையைத் தீர்க்க பல சமாதான முயற்சிகளையும் பிரபு தேவா மேற்கொண்டுள்ளார். எப்படியாவது சுமூக நிலையை ஏற்படுத்துமாறு, முக்கியப் பிரமுகரிடம் பிரபுதேவாவும் நயன்தாராவும் தனித்தனியாக பேசியுள்ளனர். அவரோ, இனி இந்த விஷயம் குறித்து என்னிடம் பேச வேண்டாம் என்று கோபத்துடன் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், பிரச்சினை தீர ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற காளஹஸ்தி கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் ரகசிய யாகத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர் பிரபு தேவாவும் நயன்தாராவும்.
காளஹஸ்தியில் பூஜை, யாகம் செய்தால் தீராத பிரச்சினையும் தீரும் என்பது ஐதீகம் என்பதால் இந்த ஏற்பாட்டில் இறங்கியுள்ளனராம் இருவரும்.
இந்த யோசனையை பிரபுதேவாவுக்குச் சொன்னவர்கள் அவரது தந்தை சுந்தரமும் அவர் மனைவியும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சுந்தரத்தைப் பொறுத்தவரை நயன்தாராவை அவர் மருமகளாகவே ஏற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே பிரபு தேவாவையும் நயன்தாராவையும் தம்பதிகளைப் போல அமர வைத்து தனது வீட்டில் பூஜை நடத்தியவர் சுந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment