உதயதாராவிடம் மன்னிப்பு கேட்டார் ஹீரோ

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'பகவான்’ படம் பற்றி இயக்குனர் ஏ.ஆர்.சைலேஷ் கூறியது: யுவராஜ், உதயதாரா நடிக்கின்றனர். கதைப்படி ஒரு காட்சியில் தன்னை ரவுடிகள் கிண்டல் செய்வதாக யுவராஜிடம் கூறுகிறார் உதயதாரா. அவரை அழைத்துக் கொண்டு கோபமாக செல்கிறார் யுவராஜ். உதயதாரா காண்பிக்கும் ஆட்களுக்கு சமூக சேவைக்கான பாராட்டு விழா நடப்பதை கண்டு அதிர்கிறார் யுவராஜ். தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்து, உதயதாராவை யுவராஜ் கன்னத்தில் அறைய வேண்டும். அறைவதற்காக கை ஓங்கும்போது தன் மீது அடிபடாமல் இருக்க உதயதாரா முகத்தை திருப்ப வேண்டும். இதில் டைமிங் மிஸ் ஆனது. பளார் என கன்னம் சிவக்கும் அளவுக்கு அறை விழுந்தது. உதயதாரா அழுதுவிட்டார். உதயதாராவிடம் யுவராஜ் மன்னிப்பு கேட்டார். சிறிது நேரம் உதயதாரா அப்செட்டில் இருந்தார். அரை மணி நேரம் கழித்தே அந்த காட்சியை மீண்டும் படமாக்க முடிந்தது.


Source: Dinakaran
 

Post a Comment