இமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு

|

Rajinikanth
ரஜினிகாந்த் ஒவ்வொரு படத்திலும் நடித்து முடித்து, அந்த படம் திரைக்கு வந்ததும் இமயமலை செல்வது வழக்கம்.
அதேபோல எந்திரன் படத்தை முடித்துக் கொடுத்ததும், அவர் இமயமலை செல்ல ஏற்கனவே திட்டமிட்டு இருந்தார். அதன்படி, அந்த படம் திரைக்கு வந்து பெரும் பெற்றுவிட்டதைத் தொர்ந்து ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட்டார். சென்னையிலிருந்து அவர் விமானம் மூலம் டெல்லி சென்று, அங்கிருந்து இமயமலைக்கு செல்கிறார்.
இமயமலையில் உள்ள ஆசிரமத்தில் ரஜினிகாந்த் தங்கியிருந்து, தியானம் செய்கிறார். ஒரு மாதம் கழித்து, அவர் சென்னை திரும்புகிறார்.
சென்னை திரும்பியதும், அடுத்த படத்தில் நடிப்பது பற்றி அவர் அறிவிப்பார் என்று தெரிகிறது.
இந்தப் புதிய படம் சத்யா மூவீஸ் தயாரிப்பாக இருக்கக் கூடும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

Post a Comment