தோட்டா தரணி… தேசிய விருதெல்லாம் வாங்கிய பெரும் கலைஞன். சமீபத்தில் ஒரு பெரிய படத்திலிருந்து சடாரென்று விலகி வந்துவிட்டார். அதுவும் சாதாரண நடிகர் அல்ல, இளம் நடிகர்களிலேயே பிரபலமாக உள்ள ஒருவரின் படத்திலிருந்து.
காரணம்…?
“ரஜினியின் படங்களிலெல்லாம் பணியாற்றியிருக்கிறேன். அவ்ளோ பெரிய நடிகரான அவரே, என்னை அவர் ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை. பாராட்டைத் தவிர வேறெதையும் அவர் சொன்னதாக நினைவில்லை.
வேறு எந்த நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளரும் எனது பணியில் குறுக்கிட்டதுமில்லை, குறை சொன்னதுமில்லை. அந்த அளவு தொழிலில் நேர்மையாகவே இருந்திருக்கிறேன்.
ஆனால் நேற்று வந்த ஒரு ஹீரோ எனக்கே ஆர்ட் டைரக்ஷன் சொல்லித் தருகிறார். அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் அளவுக்கு எனது பகுத்தறிவும் தன்மானமும் இடம்தரவில்லை” என்று கூறி விலகிவிட்டார்.
இவர்தான் இப்படியென்றால், படத்தின் கேமராமேன் ரவி கே சந்திரன் ஏக டென்ஷனில் இருக்கிறாராம். ஷாரூக்கான், அமீர்கானையெல்லாம் பார்த்த அவருக்கே கேமராவை இப்படி வையுங்க, லைட்டிங் இப்படி இருந்தால் பெட்டர், அந்தக் கோணம் வேணாம், இது ஓ.கே. என்றெல்லாம் க்ளாஸ் எடுக்கிறாராம் அந்த ஹீரோ.
இதனால் கடுப்பான ரவி, யோவ் இன்னொருவாட்டி அந்தாளு என்கிட்ட வந்தா, நானே பேக்கப் சொல்லிட்டு போயிடுவேன்” என்று இயக்குநரிடம் கடித்து விட்டாராம்.
இவர்கள் இப்படி வெளிப்படையாக புலம்புகிறார்கள் என்றால், சூப்பர் ஸ்டார் ரஜினியையே பறக்க விட்டு சண்டை போட வைத்த, படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயினோ வெளியில் சொல்ல முடியாமல் உள்ளுக்குள் புழுங்கித் தவிக்கிறாராம். இன்னும் ஒரு சான்ஸ் தருவோம். சரியா வரலேன்னா விலகிடலாம் என்பதுதான் அவரது நினைப்பும் என்கிறார்கள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு அந்த ஹாலிவுட் ஸ்டைல் இயக்குநர் என்னதான் செய்கிறார்? அவருக்கும் கூட ‘அக்காய் உக்காய்’தானாம். ஆனால், தான் முதலில் இயக்கியபோது இருந்த டம்மி பார்ட்டி இல்லை நாயகன் என்பதைப் புரிந்து, பிழைக்கத் தெரிந்த புத்திசாலியாக நடந்து கொள்கிறாராம். அதாவது வாயை மூடிக் கொண்டு வேலை பார்க்கிறாராம்.
‘எக்ஸ்ட்ரா அறிவு’ இருப்பதாக நினைத்துக் கொண்டு இப்படிக் கஷ்டப்படுத்தும் ஒரு ஹீரோவால் ஒட்டுமொத்த யூனிட்டும் புலம்பிக் கொண்டிருப்பது விசித்திரம்தான்!
காரணம்…?
“ரஜினியின் படங்களிலெல்லாம் பணியாற்றியிருக்கிறேன். அவ்ளோ பெரிய நடிகரான அவரே, என்னை அவர் ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை. பாராட்டைத் தவிர வேறெதையும் அவர் சொன்னதாக நினைவில்லை.
வேறு எந்த நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளரும் எனது பணியில் குறுக்கிட்டதுமில்லை, குறை சொன்னதுமில்லை. அந்த அளவு தொழிலில் நேர்மையாகவே இருந்திருக்கிறேன்.
ஆனால் நேற்று வந்த ஒரு ஹீரோ எனக்கே ஆர்ட் டைரக்ஷன் சொல்லித் தருகிறார். அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் அளவுக்கு எனது பகுத்தறிவும் தன்மானமும் இடம்தரவில்லை” என்று கூறி விலகிவிட்டார்.
இவர்தான் இப்படியென்றால், படத்தின் கேமராமேன் ரவி கே சந்திரன் ஏக டென்ஷனில் இருக்கிறாராம். ஷாரூக்கான், அமீர்கானையெல்லாம் பார்த்த அவருக்கே கேமராவை இப்படி வையுங்க, லைட்டிங் இப்படி இருந்தால் பெட்டர், அந்தக் கோணம் வேணாம், இது ஓ.கே. என்றெல்லாம் க்ளாஸ் எடுக்கிறாராம் அந்த ஹீரோ.
இதனால் கடுப்பான ரவி, யோவ் இன்னொருவாட்டி அந்தாளு என்கிட்ட வந்தா, நானே பேக்கப் சொல்லிட்டு போயிடுவேன்” என்று இயக்குநரிடம் கடித்து விட்டாராம்.
இவர்கள் இப்படி வெளிப்படையாக புலம்புகிறார்கள் என்றால், சூப்பர் ஸ்டார் ரஜினியையே பறக்க விட்டு சண்டை போட வைத்த, படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயினோ வெளியில் சொல்ல முடியாமல் உள்ளுக்குள் புழுங்கித் தவிக்கிறாராம். இன்னும் ஒரு சான்ஸ் தருவோம். சரியா வரலேன்னா விலகிடலாம் என்பதுதான் அவரது நினைப்பும் என்கிறார்கள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு அந்த ஹாலிவுட் ஸ்டைல் இயக்குநர் என்னதான் செய்கிறார்? அவருக்கும் கூட ‘அக்காய் உக்காய்’தானாம். ஆனால், தான் முதலில் இயக்கியபோது இருந்த டம்மி பார்ட்டி இல்லை நாயகன் என்பதைப் புரிந்து, பிழைக்கத் தெரிந்த புத்திசாலியாக நடந்து கொள்கிறாராம். அதாவது வாயை மூடிக் கொண்டு வேலை பார்க்கிறாராம்.
‘எக்ஸ்ட்ரா அறிவு’ இருப்பதாக நினைத்துக் கொண்டு இப்படிக் கஷ்டப்படுத்தும் ஒரு ஹீரோவால் ஒட்டுமொத்த யூனிட்டும் புலம்பிக் கொண்டிருப்பது விசித்திரம்தான்!
Post a Comment