கரண், அனு, ஷிபாலி சர்மா நடிக்கும் படம் 'சூரன்'. படத்தை இயக்கும் பாலு நாராயணன் கூறியதாவது: வட சென்னை மக்களின் சாதாரண வாழ்க்கைதான் படம். பொதுவாக வடசென்னை கதை என்றால் தாதா, துப்பாக்கி, ரத்தம் என்றுதான் சொல்வார்கள். இது அதிலிருந்து மாறுபட்ட படம். கரண் அமைந்தகரையில் பிறந்தவர் என்பதால் இயற்கையாகவே அவருக்கு வட சென்னை ஸ்லாங்கும், பாடிலாங்குவேஜும் யதார்த்தமாக அமைந்திருக்கிறது. ஹீரோயின்களில் அனு குப்பத்து பெண், ஷிபாலி சர்மா கதைக்குள் புதிய ஏரியாவில் இருந்து நுழைபவர். ஆனால் இருவரும் கரணோடு தொடர்புடைய கேரக்டர்கள்தான். ஆனால் காதல் இல்லை. டூயட் பாடல்களும் இல்லை. டிசம்பர் மாதம் படம் வெளிவருகிறது.
Source: Dinakaran
Post a Comment