சென்னை: மத்திய-மாநில அரசுகளில், சினிமா கலைஞர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும், என்று, இயக்குநர் பாரதி ராஜா வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தொடங்கி 40-ஆண்டுகள் ஆனதையொட்டி, சென்னையில், வருகிற 23-ந் தேதி, மிகப் பிரம்மாண்டமான விழா நடைபெற இருக்கிறது.
இது பற்றி இயக்குநர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா சென்னையில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், ” தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு சொந்தக் கட்டிடம் கட்டுவதற்காக இந்த விழா நடைபெறுகிறது.
விழாவையொட்டி வருகிற 23-ந் தேதி தமிழ் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.
சினிமாவை ஒரு தொழிலாக அங்கீகரிக்கவேண்டும். சினிமா கலைஞர்களுக்கு மத்திய-மாநில அரசுகளில் பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும். எஸ்.எஸ்.வாசன், ஸ்ரீதர் போன்ற சாதனையாளர்களுக்கு தபால்தலை (ஸ்டாம்பு) வெளியிட வேண்டும்…” என்றார்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தொடங்கி 40-ஆண்டுகள் ஆனதையொட்டி, சென்னையில், வருகிற 23-ந் தேதி, மிகப் பிரம்மாண்டமான விழா நடைபெற இருக்கிறது.
இது பற்றி இயக்குநர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா சென்னையில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், ” தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு சொந்தக் கட்டிடம் கட்டுவதற்காக இந்த விழா நடைபெறுகிறது.
விழாவையொட்டி வருகிற 23-ந் தேதி தமிழ் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.
சினிமாவை ஒரு தொழிலாக அங்கீகரிக்கவேண்டும். சினிமா கலைஞர்களுக்கு மத்திய-மாநில அரசுகளில் பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும். எஸ்.எஸ்.வாசன், ஸ்ரீதர் போன்ற சாதனையாளர்களுக்கு தபால்தலை (ஸ்டாம்பு) வெளியிட வேண்டும்…” என்றார்.
Post a Comment