சைஸ் ஜீரோவை விட்டார் கரீனா

|

Kareena Kapoor
ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாக இதுவரை வளைய வந்த கரீனா கபூர் இப்போது சைஸ் ஜீரோவுக்கு குட்பை சொல்லி விட்டார். உடம்பைப் பெருக்க வைக்கும் முயற்சியில் தற்போது அவர் தீவிரமாகியுள்ளார்.
எலும்பும் தோலுமாக தெரிவதுதான் சைஸ் ஜீரோ. இது இப்போதைய பெண்களிடம், குறிப்பாக அழகுப் பெண்களிடம் பேஷன் போல மாறி விட்டது. யாரைப் பார்த்தாலும் ஒல்லிக் குச்சியாக தெரிவதையே அதிகம் விரும்புகிறார்கள்.
இப்படி கொஞ்ச காலத்திற்கு முன்பு உலா வந்தவர்தான் கரீனா கபூர். இவரால்தான் இந்தியப் பெண்களிடம் சைஸ் ஜீரோ குறித்த விழிப்புணர்வே வந்தது. ஆனால் இப்போது கரீனா மாறி விட்டார். உடம்பைப் பெருக்க வைக்கும் ஆர்வத்திற்கு அவர் வந்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக உடம்பைக் கூட்டும் முயற்சியில் அவர் இறங்கியிருக்கிறாராம். பழையபடி புஸு புஸு உடம்புக்கு மாற வேண்டும் என்று கூறி வருகிறாராம்.
இதுகுறித்து கரீனாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இதெல்லாம் ஒரு பிரச்சினையா, தேசிய பிரச்சினையைப் போல இதைப் போய்க் கேட்கிறீர்களே என்று கூறி சிரிக்கிறார் கரீனா.
 

Post a Comment