'ஈரம்' அறிவழகன் இயக்கத்தில் அருள்நிதி

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

முதல் படத்திலேயே தங்களது திறமையை காட்டிய ஈரம் ‘அறிவழகன்’, வம்சம் ‘அருள்நிதி’ கை சேர உள்ளனர். வம்சம் படத்துக்குப் பிறகு ஏராளமான கதைகள் கேட்ட அருள்நிதி இரண்டு கதைகளை மட்டும் ஓகே செய்திருந்தார். ஒன்று ஈரம் அறிவழகன் கூறிய கதை. இரண்டாவது அறிமுக இயக்குனர் சாப்ளினுடையது. ஆனால் சாப்ளினை அழைத்து படத்தை தொடங்குவதற்கான உத்தரவை வழங்கியிருக்கிறார் அருள்நிதியின் தந்தையும், படத்தை தயா‌ரிக்கப் போகிறவருமான மு.க.தமிழரசு. இந்த படம் முடிந்த பிறகு அறிவழகன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பார் என தெரிகிறது.


Source: Dinakaran
 

Post a Comment