தமிழில் 'ரட்சகன் உள்பட ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் நாகார்ஜுனா. அவர் தனது பேட்டியில் கூறியதாவது: என்னுடைய மூத்த மகன் நாக சைதன்யாவுக்கு கேர்ள் பிரெண்ட் இருக்கிறார்களா என்று கேட்கிறார்கள். நிச்சயம் இருக்கிறார்கள். எனது மகனான அவனுக்கு எப்படி கேர்ள் பிரெண்ட் இல்லாமல் போவார்கள்? இது பற்றி அவனிடம் கேட்டால், 'அப்படி யாரும் இல்லைÕ என்றுதான் சொல்கிறான். அதை நான் நம்பத் தயாராக இல்லை. அவன் யாருடன் வீட்டுக்கு வருகிறான், வெளியே போகிறான் என்பதையெல்லாம் வாட்ச்மேனிடம் கண்காணிக்கச் சொல்லி இருக்கிறேன். அடுத்த மாதத்திலிருந்து தனி வீடு எடுத்து தங்கப் போவதாக என்னிடம் அனுமதி கேட்டபோது ஆச்சரியம் அடைந்தேன். எதற்காக அவன் தனியாக போகிறான் என்பது தெரியவில்லை. ஒருவேளை தன்னுடைய கேர்ள் பிரெண்டுடன் வசிக்க விரும்பலாம். அதை விரைவில் கண்டு பிடித்து விடுவேன்.
Source: Dinakaran
Post a Comment