நடிகர் விஜயகுமார் மீது அவரது மகளும் நடிகையுமான வனிதா, போலீசில் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. 'மாணிக்கம்', 'சந்திரலேகா' உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். டிவி நடிகர் ஆகாஷை காதலித்து மணந்தார். கருத்து வேறுபாடால் இவர்கள் பிரிந்தனர். கோர்ட்டிலும் விவாகரத்து பெற்றனர். தனது 2 குழந்தைகளுடன் வனிதா தனியாக வசித்து வருகிறார்.
தீபாவளிக்காக குழந்தைகளுடன் தந்தை வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு குழந்தைகளுடன் புறப்பட வனிதா தயாரானார். ஆனால் குழந்தைகளை அனுப்ப விஜயகுமார் மறுத்ததாக தெரிகிறது. இதனால் வனிதா, விஜயகுமார் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விஜயகுமார் மீது மதுரவாயல் போலீசில் வனிதா புகார் அளித்தார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் குழந்தைகளை அனுப்பி வைக்க விஜயகுமார் சம்மதித்தார். இதையடுத்து குழந்தைகளை வனிதா அழைத்துச் சென்றார். தொழிலதிபர் ஒருவரை வனிதா காதலிப்பதாக கூறப்படுகிறது. விஜயகுமாருடன் தகராறு ஏற்பட இதுவும் காரணம¢ என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
தீபாவளிக்காக குழந்தைகளுடன் தந்தை வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு குழந்தைகளுடன் புறப்பட வனிதா தயாரானார். ஆனால் குழந்தைகளை அனுப்ப விஜயகுமார் மறுத்ததாக தெரிகிறது. இதனால் வனிதா, விஜயகுமார் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விஜயகுமார் மீது மதுரவாயல் போலீசில் வனிதா புகார் அளித்தார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் குழந்தைகளை அனுப்பி வைக்க விஜயகுமார் சம்மதித்தார். இதையடுத்து குழந்தைகளை வனிதா அழைத்துச் சென்றார். தொழிலதிபர் ஒருவரை வனிதா காதலிப்பதாக கூறப்படுகிறது. விஜயகுமாருடன் தகராறு ஏற்பட இதுவும் காரணம¢ என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
Source: Dinakaran
Post a Comment