1/27/2011 2:08:12 PM
‘களவாணி’ படத்துக்கு பின் சற்குணம் இயக்கும் படம் ‘வாகை சூட வா’. விமல் ஹீரோவாக நடிக்கிறார். இதில் நடிக்க அமலா பால் தேர்வாகியிருந்தார். இப்போது கால்ஷீட் பிரச்னையால் படத்திலிருந்து விலக அவர் முடிவு செய்திருக்கிறாராம். இதற்கிடையே அவரை நடிக்க வைக்க படக்குழு முயற்சித்து வருகிறதாம். அதே நேரம், அமலா பால் விலக முடிவு செய்திருப்பதை அறிந்த ‘களவாணி’ பட ஹீரோயின் ஓவியா, அந்த வாய்ப்பை பிடிக்க முயற்சித்து வருகிறாராம். ஏற்கெனவே தெரிந்த இயக்குனர், ஹீரோ என்பதால் அவர்களுக்கு தூது விட்டிருக்கிறாராம் ஓவியா.
ஒருவரின் வாய்ப்பை இன்னொருவர் தட்டிப் பறிப்பதாக அமலா பால், ஓவியா பற்றி முன்பே கிசு கிசு பரவியுள்ளது. இந்நிலையில் ஓவியா இந்த பட வாய்ப்பை பெற முயற்சிப்பதால், இருவருக்கும் இடையிலான போட்டி அதிகரித்துள்ளது என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.
Post a Comment