2/21/2011 12:08:57 PM
நார்வே நாட்டில் நடக்கும் தமிழ் திரைப்பட விழாவில், சன் பிக்சர்ஸ் தயாரித்து மெகா ஹிட்டான 'எந்திரன்' படம் திரையிடப்படுகிறது. நார்வேயில், கடந்த ஆண்டு முதல், ஒவ்வொரு வருடமும் தமிழ்த் திரைப்பட விழாவை நடத்த முடிவு செய்துள்ளனர். இதையடுத்து இந்த வருடம், ஏப்ரல் மாதம் 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை, நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இப்பட விழா நடக்கிறது. இதில் 'எந்திரன்', 'ஆடுகளம்', 'அங்காடி தெரு', 'களவாணி', 'மதராசப் பட்டினம்', 'மைனா', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'யுத்தம் செய்', 'தா', 'பயணம்', 'தென்மேற்கு பருவக்காற்று', 'என் சுவாசம்' உள்ளிட்ட 13 படங்கள் திரையிடப்படுகிறது. இந்த படங்களுக்கு 22 பிரிவின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது. இதுதவிர 'எங்க வீட்டுப் பிள்ளை', 'கப்பலோட்டிய தமிழன்' ஆகிய படங்களும் திரையிடப்படுகிறது. நார்வே தமிழ் திரைப்பட விழாவின் அறிமுக கூட்டம் சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் இயக்குனர்கள் சேரன், மிஷ்கின், பிரபு சாலமன், சுசீந்திரன், வசந்தபாலன், சூரிய பிரகாகர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வசீகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment