மகன் காதலில் சிக்குவதற்குள் கால்கட்டுப்போடும் மார்க்கண்டேயன்
2/18/2011 10:32:07 AM
மகன் காதலில் சிக்குவதற்குள் அவருக்கு கால்கட்டுப்போட ஆசைப்படுகிறார் மார்க்கண்டேயன் சிவகுமார். மகனும் பெற்றோரின் விருப்பத்துக்கே விட்டுவிட்டார். 'தேதியையும், மண்டபத்தையும் மட்டும் சொல்லுங்க… மாப்பிள்ளை கோலத்துல வந்து நிக்குறேன்' என்று சொல்லிவிட்டாராம். சொந்தம் விட்டுப் போகக்கூடாதென்று சொந்தத்திலேயே பெண் தேடுகிறார்கள். இதற்காக அடிக்கடி கொங்கு மண்டலத்துக்கு பறந்து கொண்டிருக்கிறார் மார்க்கண்டேயன். அத்துடன் பெரிய நட்சத்திர குடும்பம் என்று சொந்தங்கள் ஒதுங்கிவிடக்கூடாது என்பதற்காக உறவினர்கள் வீட்டு சின்னச் சின்ன விழாக்களிலும் தவறாமல் கலந்து கொள்கிறார்.
Source: Dinakaran
Post a Comment