ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் சரண்யா மோகன்
2/4/2011 3:32:41 PM
ஏற்கனவே தெலுங்கில் நடித்த சரண்யா மோகன், மீண்டும் அங்கு நடிக்க வந்த அழைப்புகளை மறுத்திருக்கிறார். தமிழில் நல்ல இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே ஆசை. அதற்காக, தாய்மொழி மலையாளத்தில் கூட புதுப்படம் ஏற்கவில்லையாம். 'வேலாயுதம்' படத்தில் மீண்டும் தங்கையாக, விஜய்யுடன் நடித்து வருகிறார். இதனால், ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமே என்ற கவலை இல்லை என்கிறார். ஓய்வு நேரத்தில் 'வெண்ணிலா கபடி குழு', 'யாரடி நீ மோகினி' படங்களை மீண்டும் மீண்டும் பார்க்கிறாராம். மூன்று வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்வாராம்.
Source: Dinakaran
Post a Comment