5/2/2011 11:49:34 AM
விஷ்ணுவர்தன் இயக்கும் தெலுங்கு படத்தில் நடிக்கிறேன் என்றார் சம்பத். இதுபற்றி அவர் கூறியதாவது: சமீபகாலமாக, நான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். இது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. நான் சினிமாவுக்கு வரும்போதே ஹீரோ வயதை தாண்டிவிட்டேன். கேரக்டர்களை தேர்வு செய்து நடித்ததால் நிலைத்து நிற்கிறேன். ஹீரோவாக களம் இறங்கி இரண்டு படத்துடன் காணாமல் போக விரும்பவில்லை. அதனால் ஹீரோ என்பதை விட கதையின் நாயகனாக நடிப்பேன். அப்படித்தான் மூன்று கதைகளுக்கு ஓ.கே செய்திருக்கிறேன். இதுதவிர விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 'ஷேடோ' என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கிறேன். 5 பேரின் கதை. அதில் நானும் ஒருவன். நெகட்டிவ் கேரக்டர். 'ஆரண்யகாண்டம்', 'வர்ணம்' படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்திருக்கிறேன்.
Post a Comment