சுசீந்திரன் இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவான அழகர்சாமியின் குதிரை இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று சென்னை பிரசாத் லேபில் திரையிடப்பட்டது.
படம் பார்த்த அத்தனைபேரும் கைதட்டிப் பாராட்டினார்கள், காட்சி முடிந்ததும். சற்று கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற சுசீந்திரன் கைகளைக் குலுக்கியும், தோளில் தட்டியும் பாராட்டித் தள்ளி்னார்கள்.
படத்தின் நாயகன் அப்புக்குட்டிக்கு ஏக சந்தோஷம். "இந்தப் படத்தில் எல்லாப் புகழும் சுசீந்திரனுக்குதான். அவர்தான் உண்மையான ஹீரோ. எனக்கு இந்த வாழ்க்கை கிடைக்க காரணம் அவர்தான். அழகர்சாமியின் குதிரையை நானும் பார்த்தேன். என்ன சொல்லவதென்றே தெரியவில்லை. அவரைப் பாராட்ட வார்த்தைகளில்லை.
அய்யா இளையராஜாவின் இசையில் நான் நடித்ததை கடவுளின் ஆசீர்வாதம் என்றுதான் சொல்லவேண்டும். அதுவும் எனக்காக அவர் குரல்மாற்றி பாடியதை என்னவென்று சொல்வது. படம் பார்த்துவிட்டு என்னை அழைத்துப் பாராட்டினார் ராஜா சார். பல விருதுகளுக்கு இணையானது அந்தப் பாராட்டு!", என்கிறார் அப்புக்குட்டி.
எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த சுசீந்திரனிடம் படம் குறித்து கேட்டபோது, "என் வேலையை நேர்மையாகச் செய்துள்ளேன். பத்திரிகையாளர்களும் மக்களும்தான் இனி பேசவேண்டும்...", என்றார்.
சுசீந்திரனின் நேர்மையான படைப்புக்கு விருதுககளும் பாராட்டுக்களும் மட்டுமல்ல, வசூலும் குவியட்டும்!
படம் பார்த்த அத்தனைபேரும் கைதட்டிப் பாராட்டினார்கள், காட்சி முடிந்ததும். சற்று கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற சுசீந்திரன் கைகளைக் குலுக்கியும், தோளில் தட்டியும் பாராட்டித் தள்ளி்னார்கள்.
படத்தின் நாயகன் அப்புக்குட்டிக்கு ஏக சந்தோஷம். "இந்தப் படத்தில் எல்லாப் புகழும் சுசீந்திரனுக்குதான். அவர்தான் உண்மையான ஹீரோ. எனக்கு இந்த வாழ்க்கை கிடைக்க காரணம் அவர்தான். அழகர்சாமியின் குதிரையை நானும் பார்த்தேன். என்ன சொல்லவதென்றே தெரியவில்லை. அவரைப் பாராட்ட வார்த்தைகளில்லை.
அய்யா இளையராஜாவின் இசையில் நான் நடித்ததை கடவுளின் ஆசீர்வாதம் என்றுதான் சொல்லவேண்டும். அதுவும் எனக்காக அவர் குரல்மாற்றி பாடியதை என்னவென்று சொல்வது. படம் பார்த்துவிட்டு என்னை அழைத்துப் பாராட்டினார் ராஜா சார். பல விருதுகளுக்கு இணையானது அந்தப் பாராட்டு!", என்கிறார் அப்புக்குட்டி.
எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த சுசீந்திரனிடம் படம் குறித்து கேட்டபோது, "என் வேலையை நேர்மையாகச் செய்துள்ளேன். பத்திரிகையாளர்களும் மக்களும்தான் இனி பேசவேண்டும்...", என்றார்.
சுசீந்திரனின் நேர்மையான படைப்புக்கு விருதுககளும் பாராட்டுக்களும் மட்டுமல்ல, வசூலும் குவியட்டும்!
Post a Comment