5/16/2011 10:54:31 AM
'ராமன் தேடிய சீதை', 'ஆட்டநாயகன்', 'இளைஞன்', 'குள்ளநரி கூட்டம்' ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மலையாள நடிகை ரம்யா நம்பீஸன். அவர் கூறியதாவது: பாவனா, பார்வதி, நயன்தாரா ஆகியோரைத் தொடர்ந்து நானும் கன்னடத்தில் அறிமுகமாகிறேன். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அஜய் ராவ் ஹீரோ. காமெடி படமான இதில் மலேசியாவில் இருந்து வரும் என்.ஆர்.ஐயாக நடிக்கிறேன். பாவனாவைத் தொடர்ந்து நானும் கன்னடத்துக்கு வருவதாக கூறுகிறார்கள். பாவனா எனது தோழி. தொழில்ரீதியாகவும் பர்சனலாகவும் வெளிப்படையாக நாங்கள் பேசிக்கொள்வோம். அவள் சிறந்த நடிகை. அவளைப் பின்பற்றி நானும் கன்னடத்துக்கு வருவதாக சொல்வது சரியானதல்ல. எனக்கு வாய்ப்பு வந்திருக்கிறது, வந்திருக்கிறேன். அவ்வளவுதான். பல கன்னடப் படங்களை பார்த்திருக்கிறேன். புனித் ராஜ்குமாரின் நடிப்பு எனக்குப் பிடிக்கும். கன்னடத்தில் நடிப்பதன் மூலம், அனைத்து தென்னிந்திய மொழிகளில் நானும் நடித்துவிட்டேன். தமிழில் நடித்துள்ள 'குள்ளநரி கூட்டம்', ஆர்ப்பாட்டமில்லாத ஹிட்டாகி இருக்கிறது. ஹிட்தான் நடிகர், நடிகைகளை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்கிறது. அதனால் அதிக ஹிட் படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறேன். இவ்வாறு ரம்யா நம்பீஸன் கூறினார்.
Post a Comment