5/21/2011 11:56:50 AM
கேபிடல் பிலிம்ஸ் சார்பில் எஸ்.பி.சரண் தயாரித்துள்ள படம் 'ஆரண்ய காண்டம்'. வன்முறை மற்றும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி படத்தை வெளியிட சென்னை தணிக்கை குழு தடை விதித்தது. இதை எதிர்த்து தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் படத்தை டிரிபியூனலுக்கு கொண்டு சென்றார். படத்தை பார்த்த டிரிபியூனல் குழு வெளியிட அனுமதி அளித்திருக்கிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா கூறும்போது, 'டெல்லியில், ஒரு நீதிபதி, இரு உறுப்பினர்கள், மற்றும் சென்சார் சார்பில் தற்போது சென்னை மண்டல அதிகாரியாக இருக்கும் பக்கிரிசாமி ஆகியோர் படத்தை பார்த்தார்கள். ஒரு சில கட் மட்டும் கொடுத்து படத்தை வெளியிட அனுமதி வழங்கினார்கள். சில காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்கச் சொன்னார்கள். அவற்றை நீக்கி விட்டோம். விரைவில் படம் வெளிவருகிறது' என்றார்.
Post a Comment