மதுர் பண்டர்கரின் 'ஹீரோயின்' பட நாயகியானார் ஐஸ்வர்யா

|

Tags:


மதுர் பண்டர்கர் அடுத்து இயக்கப் போகும் ஹீரோயின் படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராய் புக் ஆகியுள்ளார்.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம். அனேகமாக கேன்ஸ் திரைப்பட விழாவின்போது அது வெளியாகலாம் என்று தெரிகிறது. பண்டகர்கரும், யுடிவியும் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

ஒரு சினிமா நாயகியின் கதைதான் இப்படத்தின் கதையாகும். இப்படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய் முழு விருப்பம் தெரிவித்துள்ளார். மிகவும் ஆர்வமாக உள்ளார் என்று பண்டர்கர் தரப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக கரீனா கபூரை இப்படத்தின் நாயகியாக்க அணுகினர். ஆனால் சில பல டிஸ்கஷன்களுக்குப் பிறகு அந்தத் திட்டம் கைவிடபப்பட்டது. கரீனாதான் இந்தப் படத்தில் நடிக்க விரும்பவில்லை என்று கூறி விட்டார் என்று தெரிகிறது. இதையடுத்தே ஐஸ்வர்யாவை அணுகி புக் செய்துள்ளார் பண்டர்கர்.
 

Post a Comment