சென்னை : நடிகர் ரஜினிகாந்த் சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவர் அனுமதிக்கப்பட்டுள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் டிஜி நல்லமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நடிகர் ரஜினி தற்போது சாதாராண வார்டில் தான் சிகிச்சை பெற்று வருகிறார். அவசர சிகிச்சை பிரிவில் (ஐசியு) இல்லை.
நுரையீரலில் தொற்று பாதிப்பு குறித்து அவருக்கு முழு பரிசோதனை நடைபெறுகிறது. தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
உடல்நலம் சீராகும் வரை, ரஜினி முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று அவரை கவனித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமையன்றே இங்கு சேர்க்கப்பட்டு விட்டார். ஆனால் அதை ஏதோ மறைப்பது போல அவரது மனைவி லதா வீட்டில்தான் இருக்கிறார், நன்றாக இருக்கிறார் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று காலை ரஜினிகாந்த் குறித்து மீண்டும் தவறான செய்தி பரவியது. இதையடுத்து ராமச்சந்திரா மருத்துவமனையே முன்வந்து விளக்கம் அளித்துள்ளது.
ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் டிஜி நல்லமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நடிகர் ரஜினி தற்போது சாதாராண வார்டில் தான் சிகிச்சை பெற்று வருகிறார். அவசர சிகிச்சை பிரிவில் (ஐசியு) இல்லை.
நுரையீரலில் தொற்று பாதிப்பு குறித்து அவருக்கு முழு பரிசோதனை நடைபெறுகிறது. தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
உடல்நலம் சீராகும் வரை, ரஜினி முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று அவரை கவனித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமையன்றே இங்கு சேர்க்கப்பட்டு விட்டார். ஆனால் அதை ஏதோ மறைப்பது போல அவரது மனைவி லதா வீட்டில்தான் இருக்கிறார், நன்றாக இருக்கிறார் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று காலை ரஜினிகாந்த் குறித்து மீண்டும் தவறான செய்தி பரவியது. இதையடுத்து ராமச்சந்திரா மருத்துவமனையே முன்வந்து விளக்கம் அளித்துள்ளது.
Post a Comment