ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி 15-ந்தேதி விவசாயிகளுக்கு நஷ்டஈடு கோரி குண்டூரில் 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார். இந்தப் போராட்டத்துக்கு நடிகை ஜெயப்ரதா ஆதரவு தெரிவித்துள்ளார்.
ராஜமுந்திரியில் நடந்த விழாவில் பங்கேற்க வந்த நடிகை ஜெயப்பிரதா நிருபர்களிடம் கூறுகையில், "ஆந்திராவில் வெள்ள நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு மாநில அரசு வெள்ள நிவாரணம் வழங்க மறுத்து விட்டது. அவர்களுக்கு நஷ்டஈடு வழங்க கோரி ஜெகன்மோகன் ரெட்டி போராட்டம் நடத்துவது பாராட்டத்தக்கது. அவருக்கு எனது முழு ஆதரவு உண்டு.
ஆந்திர மக்களின் நலனுக்காக ஜெகன்மோகன் ரெட்டி பாடுபடுகிறார். நான் விரைவில் ஆந்திர அரசியலுக்கு திரும்ப திட்டமிட்டுள்ளேன். மக்களுக்காக பாடுபடும் ஆந்திர கட்சியில் இணைந்து மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபடுவேன்," என்றார்.
ராஜமுந்திரியில் நடந்த விழாவில் பங்கேற்க வந்த நடிகை ஜெயப்பிரதா நிருபர்களிடம் கூறுகையில், "ஆந்திராவில் வெள்ள நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு மாநில அரசு வெள்ள நிவாரணம் வழங்க மறுத்து விட்டது. அவர்களுக்கு நஷ்டஈடு வழங்க கோரி ஜெகன்மோகன் ரெட்டி போராட்டம் நடத்துவது பாராட்டத்தக்கது. அவருக்கு எனது முழு ஆதரவு உண்டு.
ஆந்திர மக்களின் நலனுக்காக ஜெகன்மோகன் ரெட்டி பாடுபடுகிறார். நான் விரைவில் ஆந்திர அரசியலுக்கு திரும்ப திட்டமிட்டுள்ளேன். மக்களுக்காக பாடுபடும் ஆந்திர கட்சியில் இணைந்து மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபடுவேன்," என்றார்.
Post a Comment