தேனீர் விடுதி பந்தல்காரர்களின் வாழ்க்கை!

|

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தேனீர் விடுதி பந்தல்காரர்களின் வாழ்க்கை!

5/30/2011 10:48:08 AM

இசை அமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கும் படம் 'தேனீர் விடுதி'. ஆதித், ரேஷ்மா. ரவிவர்மன் நடிக்கிறார்கள். படம் பற்றி எஸ்.எஸ்.குமரன் நிருபர்களிடம் கூறியதாவது: கிராமத்தில் பந்தல் போடும் தொழில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்கள். கல்யாண வீடு முதல் சாவு வீடுவரை இவர்களின் பங்களிப்பு இருக்கும். ஆனால் கலை இலக்கிய வடிவங்கள் இந்த மக்களைப் பற்றி பதிவு செய்யவில்லை. அதனால் இந்தப் படத்தில் அவர்கள் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறேன். பந்தல் போட்டு வரும் பணத்தில் நன்றாக குடித்து, சாப்பிட்டு அடுத்த நாளைப் பற்றி சிந்திக்காமல் அன்றைய நாளை சந்தோஷமாக வாழ நினைக்கும் பந்தல்காரனுக்கும் நேர்மையான அரசு அதிகாரியின் மகளுக்கும் காதல். அதிகாரிக்கோ குடிகாரர்களை பிடிக்காது. அவர் எப்படி இவர்கள் காதலை ஏற்கிறார் என்பதுதான் படம். ஒரு காதல் வழியாக, புறக்கணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை சொல்கிறேன். பொழுதுபோக்கு சினிமாவிற்குரிய அத்தனை அம்சங்களோடும் வெளிவருகிறது. வில்லனும், ஹீரோவும் கடைசிவரை சந்தித்துக் கொள்ளாத மாதிரியான திரைக்கதை அமைப்பு வித்தியாசமாக இருக்கும்.

 

Post a Comment