படப்பிடிப்பு முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் வெளிவராத படம்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

படப்பிடிப்பு முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் வெளிவராத படம்

6/28/2011 12:58:44 PM

களவாடிய பொழுதுகள்” படத்தை முடித்து பல ஆண்டுகள் ஆகியும்  வெளிவராமல் இருப்பதை நினைத்து தினமும் வருந்திக்கொண்டு இருக்கிறார் டைரக்டர் தங்கர் பச்சான். அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம் என்று இதுவரை மண் சார்ந்த, மக்கள் சார்ந்த படமாக எடுத்த டைரக்டர் தங்கர் பச்சான், மீண்டும் ஒரு உணர்வுபூர்வமாக ஒரு கதையை எழுதி, இயக்கி இருக்கும் படம் தான் “களவாடிய பொழுதுகள்”. பிரபுதேவா, பூமிகா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தபடம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும், வெளியிட முடியாமல்இருக்கிறது. படத்தை இயக்கிய தங்கர் பச்சனோ என்ன செய்வது என்று புரியாமல் தவித்து வருகிறார். மேலும் தன்னுடைய அடுத்த படவேலைகளிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறார்.

இதுகுறித்து தங்கர் கூறியதாவது : ஒரு படத்தை முடித்துவிட்டு பல வருடங்களாக அந்த படத்தை வெளியிட முடியாமல் படைப்பாளி காத்திருப்பது மிக கொடுமையான விஷயம். என்னுடைய முந்தய படங்களை எல்லாம் 90நாட்களில் கூட முடித்து ரிலீஸ் செய்திருக்கிறேன். ஆனால் “களவாடிய பொழுதுகளை” முடித்து ஆண்டுகள் பல ஆகியும், இவ்வளவு காலம் காத்திருப்பது வருந்தத்தக்கது. “களவாடிய பொழுதுகள்” மனித உறவுகளை, உணர்வுகளை பேசும் என்றும் அந்த நாளுக்காக நான் காத்திருப்பதாகவும் வருத்தத்துடன் கூறினார்.

 

Post a Comment