தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல் இன்று நடந்தது.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில், 2,100 இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். கடந்த 2 வருடமாக இயக்குநர் பாரதிராஜாதான் தலைவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அடுத்த 2 வருடங்களுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செயவதற்கான தேர்தல் இன்று நடந்தது. வடபழனியில் உள்ள இசையமைப்பாளர்கள் யூனியன் வளாகத்தில் காலை 8 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. மாலை 4 மணி வரை ஓட்டுப் போடலாம்.
கவிஞர் பிறைசூடன் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். காலை முதலே இயக்குநர்களும், உதவி இயக்குநர்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், கே.எஸ்.ரவிக்குமார், அமீர், சசிக்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர், தரணி, தியாகராஜன், ஷங்கர் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
தலைவர் பதவிக்கு பாரதிராஜாவை எதிர்த்து உதவி இயக்குநர் முரளி போட்டியிடுகிறார்.
செயலாளர் பதவிக்கு அமீர் மற்றும் அவரை எதிர்த்து அப்துல் மஜீத் போட்டியிடுகின்றனர்.
பொருளாளர் பதவிக்கு ஜனநாதன், துணைத் தலைவர்கள் பதவிக்கு சேரன், சமுத்திரக்கனி ஆகியோர் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர்.
4 இணைச் செயலாளர்கள் பதவிகளுக்கு 10 பேர் போட்டியிடுகின்றனர். 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 34 பேர் போட்டியிடுகின்றனர்.
இன்று இரவு தலைவர், செயலாளர் பதவிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும். நாளை செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில், 2,100 இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். கடந்த 2 வருடமாக இயக்குநர் பாரதிராஜாதான் தலைவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அடுத்த 2 வருடங்களுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செயவதற்கான தேர்தல் இன்று நடந்தது. வடபழனியில் உள்ள இசையமைப்பாளர்கள் யூனியன் வளாகத்தில் காலை 8 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. மாலை 4 மணி வரை ஓட்டுப் போடலாம்.
கவிஞர் பிறைசூடன் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். காலை முதலே இயக்குநர்களும், உதவி இயக்குநர்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், கே.எஸ்.ரவிக்குமார், அமீர், சசிக்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர், தரணி, தியாகராஜன், ஷங்கர் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
தலைவர் பதவிக்கு பாரதிராஜாவை எதிர்த்து உதவி இயக்குநர் முரளி போட்டியிடுகிறார்.
செயலாளர் பதவிக்கு அமீர் மற்றும் அவரை எதிர்த்து அப்துல் மஜீத் போட்டியிடுகின்றனர்.
பொருளாளர் பதவிக்கு ஜனநாதன், துணைத் தலைவர்கள் பதவிக்கு சேரன், சமுத்திரக்கனி ஆகியோர் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர்.
4 இணைச் செயலாளர்கள் பதவிகளுக்கு 10 பேர் போட்டியிடுகின்றனர். 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 34 பேர் போட்டியிடுகின்றனர்.
இன்று இரவு தலைவர், செயலாளர் பதவிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும். நாளை செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.
Post a Comment