"நான் வட இந்தியப் பெண், என்னை தென்னிந்திய நடிகை என்று கூறாதீர்கள்", என்று மேடையில் முழங்கி, பின்னர் நான் அப்படிச் சொல்லவே இல்லை என்று மறுத்த காஜல் அகர்வாலுக்கு தெலுங்கு திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காஜல் அகர்வால் தெலுங்குப் பட வாய்ப்புகளுக்காக பொய் சொல்கிறார், என்று சக நடிகைகள் மற்றும் முன்னணி இயக்குநர்கள் அவர் மீது புகார் கூறியுள்ளனர்.
சிங்கம் படத்தின் இந்திப் பதிப்பில் நடிக்கிறார் காஜல். இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தன்னை எல்லோரும் தென்னிந்திய நடிகை என குறிப்பிடுவது பிடிக்கவில்லை என்றார்.
ஒரே ஒரு இந்திப் படத்தில் நடித்த உடன் வாழ்க்கை தந்த தமிழ் - தெலுங்குப் பட உலகை அவமானப்படுத்துகிறார் காஜல் என அவருக்கு எதிராகக் கிளம்பினர் தென்னிந்தியப் பட உலகினர்.
இந்த நிலையில், நான் அப்படிச் சொல்லவே இல்லை. நான் சொன்னதை தப்பா எழுதிட்டாங்க, என்று சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார் காஜல். தென்னிந்தியப் படங்களில் நடிப்பதில் நான் பெருமை அடைகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இதனை ஏற்க தெலுங்கு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் தயாராக இல்லை.
"காஜல் இப்போது தொடர்ந்து பொய் பேசுகிறார். அவர் பேசியது தவறு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், வட இந்திய நடிகை என்பதை பெருமையாக நினைக்கும் அவருக்கு தமிழ் - தெலுங்கு சினிமாவில் என்ன வேலை?," என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
காஜல் அகர்வால் தெலுங்குப் பட வாய்ப்புகளுக்காக பொய் சொல்கிறார், என்று சக நடிகைகள் மற்றும் முன்னணி இயக்குநர்கள் அவர் மீது புகார் கூறியுள்ளனர்.
சிங்கம் படத்தின் இந்திப் பதிப்பில் நடிக்கிறார் காஜல். இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தன்னை எல்லோரும் தென்னிந்திய நடிகை என குறிப்பிடுவது பிடிக்கவில்லை என்றார்.
ஒரே ஒரு இந்திப் படத்தில் நடித்த உடன் வாழ்க்கை தந்த தமிழ் - தெலுங்குப் பட உலகை அவமானப்படுத்துகிறார் காஜல் என அவருக்கு எதிராகக் கிளம்பினர் தென்னிந்தியப் பட உலகினர்.
இந்த நிலையில், நான் அப்படிச் சொல்லவே இல்லை. நான் சொன்னதை தப்பா எழுதிட்டாங்க, என்று சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார் காஜல். தென்னிந்தியப் படங்களில் நடிப்பதில் நான் பெருமை அடைகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இதனை ஏற்க தெலுங்கு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் தயாராக இல்லை.
"காஜல் இப்போது தொடர்ந்து பொய் பேசுகிறார். அவர் பேசியது தவறு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், வட இந்திய நடிகை என்பதை பெருமையாக நினைக்கும் அவருக்கு தமிழ் - தெலுங்கு சினிமாவில் என்ன வேலை?," என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
Post a Comment