தமிழில் கவனம் செலுத்தாதது ஏன்?

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழில் கவனம் செலுத்தாதது ஏன்?

7/9/2011 12:08:26 PM

'இந்த வருடம் 3 தெலுங்கு படங்களில் நடிக்கிறேன். அடுத்த வருடம் தமிழில் கவனம் செலுத்துவேன்' என்றார் தமன்னா. அவர் மேலும் கூறியதாவது: தனுஷுடன் நான் நடித்துள்ள 'வேங்கை' ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் எனது நடிப்பை எல்லோரும் பாராட்டுகிறார்கள். தனுஷுடன் நான் நடித்துள்ள இரண்டாவது படம் இது. ஏற்கனவே 'படிக்காதவன்' படத்தில் நடித்திருந்தேன். சினிமா துறையில் எனக்கு நண்பர்கள் என்று சிலர்தான் இருக்கிறார்கள். அதில் தனுஷ் ஒருவர். 'வேங்கை'யில் பாடல் காட்சிகளில் எங்கள் கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள். தமிழில் அடுத்து படங்கள் இல்லையே என்கிறார்கள். தற்போது தெலுங்கில் 3 படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதால் தமிழில் கவனம் செலுத்த முடியவில்லை. இந்தப் படங்களுக்குப் பிறகு அடுத்த வருடம் தமிழில் கவனம் செலுத்துவேன். இவ்வாறு தமன்னா கூறினார்.




 

Post a Comment