கரையைக் கடந்த 'ரௌத்திரம்'!
7/2/2011 10:48:46 AM
7/2/2011 10:48:46 AM
ஜீவா, ஸ்ரேயா நடித்த 'ரௌத்திரம்' விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 'கோ' படம் வெற்றி பிறகு ஜீவாவின் மார்கெட் உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் அவர் நடித்த 'ரௌத்திரம்' படம் மட்டும் அதிகம் அடிப்பட்டது. படம் வருமா வராதா என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. கடைசியாக 'ரௌத்திரம்' கரையைக் கடந்திருக்கிறது. ஆம், படத்தின் கடைசி இருநாள் படப்பிடிப்பை புதுச்சேரியில் நடத்தியிருக்கிறார்கள். ஆக்சன் படமான இதில் சமூதாய கோபத்துடன் இயங்கும் கோபக்கார இளைஞன் வேடமாம் ஜீவாவுக்கு. அறிமுக இயக்குனர் கோகுல் படத்தை இயக்கியுள்ளார். ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருக்கும் இந்தப் படம் ஜீவாவின் வந்தான் வென்றானுக்கு முன்பாக திரைக்கு வருகிறது.
Post a Comment