மும்பை: நடிகர் சஞ்சய் தத் வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
1993-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நடிகர் சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டது. சட்டத்துக்கு புறம்பாக ஆயுதம் வைத்திருந்தது தொடர்பாக அவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது அவர் நிபந்தனை ஜாமீனில் இருக்கிறார். இந்த நிலையில் வெளிநாடு செல்ல அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர் 2012-ஆம் ஆண்டு ஜனவரி 10-ந்தேதி வரை வெளிநாடு சென்று வர அனுமதி வழங்கி உள்ளது. மேலும் அவர் இந்தியா திரும்பியதும் ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
சஞ்சய் தத் ஏற்கனவே உச்சநீதிமன்ற அனுமதி பெற்று படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1993-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நடிகர் சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டது. சட்டத்துக்கு புறம்பாக ஆயுதம் வைத்திருந்தது தொடர்பாக அவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது அவர் நிபந்தனை ஜாமீனில் இருக்கிறார். இந்த நிலையில் வெளிநாடு செல்ல அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர் 2012-ஆம் ஆண்டு ஜனவரி 10-ந்தேதி வரை வெளிநாடு சென்று வர அனுமதி வழங்கி உள்ளது. மேலும் அவர் இந்தியா திரும்பியதும் ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
சஞ்சய் தத் ஏற்கனவே உச்சநீதிமன்ற அனுமதி பெற்று படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment