7/4/2011 3:01:43 PM
இயக்குனர் செல்வராகவன் கீதாஞ்சலி ராமன் திருமணம் சென்னையில் நேற்று நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது. செல்வராகவனுக்கும், முன்னாள் அட்வகேட் ஜெனரல் ராமன் மகள் கீதாஞ்சலிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்கள் திருமணம் 03.07.2011 அன்று காலை கிண்டியில் உள்ள லீராயல் மெரிடியன் ஓட்டலில் நடந்தது. இது காதல் திருமணமாகும். திருமண சடங்குகள் காலை 8.50 மணிக்கு தொடங்கியது. 9.15 மணிக்கு வைதீக முறைப்படி புரோகிதர்கள் மந்திரம் ஓத கீதாஞ்சலிக்கு செல்வராகவன் தாலி கட்டினார். அப்போது கூடியிருந்தவர்கள் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினார்கள்.
பட அதிபர் ஏ.வி.எம். சரவணன், தொழில் அதிபர், எம்.ஏ.எம். ராமசாமி, டைரக்டர் மணிரத்னம், சுகாசினி, தயாரிப்பாளர்கள் ராம்குமார், சத்யஜோதி தியாகராஜன், நடிகர் சின்னி ஜெயந்த், அரவிந்தசாமி, டைரக்டர் அழகம்பெருமாள், கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், போலீஸ் அதிகாரிகள் லத்திகா சரண், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினார்கள். திருமணத்துக்கு வந்தவர்களை செல்வராகவனின் தந்தை டைரக்டர் கஸ்தூரி ராஜா, நடிகர் தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் வரவேற்றனர்.
Post a Comment