பிராச்சி தேசாயால் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளது தடையறத் தாக்க திரைப்பட குழு. படத்தைத் தொடர முடியாமல் பெரும் தவிப்புக்குள்ளாகி விட்ட இக்குழுவினர் தற்போது பிராச்சியை நீக்கி விட்டு மமதா மோகன்தாஸை நாயகியாக்கியுள்ளனர்.
அப்படி என்ன செய்து விட்டார் பிராச்சி?. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் நடிக்குமாறு பிராச்சி தேசாயை அணுகியுள்ளனர். பெரும் சம்பளம் கேட்டார் பிராச்சி. அதற்கும் ஓ.கே. சொல்லி புக் செய்துள்ளனர். மார்ச் 7ம் தேதி படப்பிடிப்பு தொடங்கியது. பிராச்சியும் வந்தாராம். ஆனால் படப்பிடிப்பில் பங்கேற்காமல், மும்பைக்குக் கிளம்பிப் போய் விட்டார். அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லை என்பது அவர் சொன்ன காரணம். அதற்குப் பிறகு வரவே இல்லையாம்.
தொடர்பு கொண்டு கேட்டபோது இப்படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று கூறி விட்டாராம். தற்போது இந்திப் படம் ஒன்றில் அவர் புக் ஆகியுள்ளதாக மகிழ் திருமேனிக்குத் தகவல் வந்துள்ளதாம்.
இதனால் பெரும் ஏமாற்றமாகியுள்ளது தடையறத் தாக்க படக் குழு. பெரும் தொகையை அட்வான்ஸ் ஆக வாங்கிக் கொண்டு இப்படி பிராச்சி டேக்கா கொடுத்திருப்பது மிகவும் தவறான செயல் என்று கூறியுள்ள படத் தயாரிப்பாளர், இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளாராம். ஆனால் தயாரிப்பாளர் சங்கமோ ஏகப்பட்ட உள்நாட்டுக் குழப்பத்தில் இருப்பதால் இப்போதைக்கு பிராச்சி குறித்து விசாரிக்காது என்று கூறப்படுகிறது.
பிராச்சி பிரச்சின ஒருபக்கம் இருந்து வரும் நிலையில் தற்போது அவருக்குப் பதில் புதிய நாயகியை கண்டுபிடித்துள்ளனர். அவர் மமதா மோகன்தாஸ். முதலில் இவரைத்தான் நாயகியாக்குவது குறித்து யோசித்துள்ளனர். பின்னர்தான் பிராச்சி பக்கம் திரும்பினார்கள். தற்போது பிராச்சி பிரச்சினையாகவே மீண்டும் மம்தாவை நாடியுள்ளனராம்.
இப்படத்தில் பெமினா மிஸ் இந்தியா பட்டம் வென்ற ராகுல்ப்ரீத் சிங்கும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.நாயகனாக அருண் விஜய் நடிக்கிறார். திங்கள்கிழமையன்று மம்தா மோகன்தாஸ் படப்பிடிப்பில பங்கேற்கிறாராம்.
அப்புறம் என்ன, இனி தடையறத் தாக்க வேண்டியதுதானே...!
அப்படி என்ன செய்து விட்டார் பிராச்சி?. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் நடிக்குமாறு பிராச்சி தேசாயை அணுகியுள்ளனர். பெரும் சம்பளம் கேட்டார் பிராச்சி. அதற்கும் ஓ.கே. சொல்லி புக் செய்துள்ளனர். மார்ச் 7ம் தேதி படப்பிடிப்பு தொடங்கியது. பிராச்சியும் வந்தாராம். ஆனால் படப்பிடிப்பில் பங்கேற்காமல், மும்பைக்குக் கிளம்பிப் போய் விட்டார். அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லை என்பது அவர் சொன்ன காரணம். அதற்குப் பிறகு வரவே இல்லையாம்.
தொடர்பு கொண்டு கேட்டபோது இப்படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று கூறி விட்டாராம். தற்போது இந்திப் படம் ஒன்றில் அவர் புக் ஆகியுள்ளதாக மகிழ் திருமேனிக்குத் தகவல் வந்துள்ளதாம்.
இதனால் பெரும் ஏமாற்றமாகியுள்ளது தடையறத் தாக்க படக் குழு. பெரும் தொகையை அட்வான்ஸ் ஆக வாங்கிக் கொண்டு இப்படி பிராச்சி டேக்கா கொடுத்திருப்பது மிகவும் தவறான செயல் என்று கூறியுள்ள படத் தயாரிப்பாளர், இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளாராம். ஆனால் தயாரிப்பாளர் சங்கமோ ஏகப்பட்ட உள்நாட்டுக் குழப்பத்தில் இருப்பதால் இப்போதைக்கு பிராச்சி குறித்து விசாரிக்காது என்று கூறப்படுகிறது.
பிராச்சி பிரச்சின ஒருபக்கம் இருந்து வரும் நிலையில் தற்போது அவருக்குப் பதில் புதிய நாயகியை கண்டுபிடித்துள்ளனர். அவர் மமதா மோகன்தாஸ். முதலில் இவரைத்தான் நாயகியாக்குவது குறித்து யோசித்துள்ளனர். பின்னர்தான் பிராச்சி பக்கம் திரும்பினார்கள். தற்போது பிராச்சி பிரச்சினையாகவே மீண்டும் மம்தாவை நாடியுள்ளனராம்.
இப்படத்தில் பெமினா மிஸ் இந்தியா பட்டம் வென்ற ராகுல்ப்ரீத் சிங்கும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.நாயகனாக அருண் விஜய் நடிக்கிறார். திங்கள்கிழமையன்று மம்தா மோகன்தாஸ் படப்பிடிப்பில பங்கேற்கிறாராம்.
அப்புறம் என்ன, இனி தடையறத் தாக்க வேண்டியதுதானே...!
Post a Comment