7/13/2011 3:21:11 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
உதவி இயக்குனருங்க பிரபல ஹீரோங்ககிட்ட கதை சொல்லப்போக பயப்படுறாங்களாம்… பயப்படுறாங்களாம்… கதை பிடிச்சிருந்தா, 'சப்ஜெக்ட்டை என்கிட்ட கொடுங்க. டைரக்டரை நான் சொல்றேன்Õனு ஹீரோக்கள் சொல்றாங்களாம்… சொல்றாங்களாம்… ஹீரோவே இப்படி கேக்கும்போது வாய்ப்பு கேட்டுபோறவங்களுக்கு இக்கட்டான நிலை ஏற்படுதாம். இதனால ஹீரோக்களை சந்திச்சி கதை சொல்லவே பயப்படுறாங்களாம்… உதவி இயக்குனருங்க பயப்படுறாங்களாம்…
சினிமாக்காரங்களுக்கு வீடு கட்டுறதுக்காக ஒதுக்க¤ய இடத்தை எல்லா சங்கத்துக்காரங்களும் போய் பார்த்து ஓகே சொன்னாங்க. ஆனா இப்போ திடீர்னு எங்களுக்கு அந்த இடம் பிடிக்கலேன்னு சில சங்கத்தாரு மாத்திப் பேசுறாங்களாம்… பேசுறாங்களாம்… இதனால மத்த சங்கத்துக்காரங்க குழப்பத்துல இருக்காங்களாம்… இருக்காங்களாம்…
அருணான நடிகரோட படத்துல நடிக்க மறுத்தாரு மம்தா நடிகை. இதனால இந்தி நடிகையை தேர்வு பண்ணினாங்க. இந்தி நடிகை திடீர்னு கல்தா கொடுத்ததால திரும்ப மம்தாகிட்ட பேசினாங்க. நடிகையும் நடிக்க சம்மதிச்சிட்டாரு. முதல்ல மம்தா மறுத்ததுக்கும், இப்போ ஓகே சொன்னதுக்கும் சம்பளம்தான் காரணமாம்… காரணமாம்… மம்தா நடிகை கேட்ட சம்பளம் தர்றதா தயாரிப்பு ஒத்துக்கிட்டதால, நடிகை ஓகே சொன்னாராம்… சொன்னாராம்…
Post a Comment