தயாரிப்பாளர் மீது திவ்யா தாக்கு

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தயாரிப்பாளர் மீது திவ்யா தாக்கு

7/4/2011 3:04:57 PM

தயாரிப்பாளர், இயக்குனரிடம் அடிக்கடி மோதல் போக்கை கடைப்பிடித்து பரபரப்பை ஏற்படுத்தும் நடிகையாகி விட்டார் திவ்யா. சமீபத்தில் கன்னட தயாரிப்பாளர் ஒருவருடன் ஏற்பட்ட மோதலின்போது 'இனி கன்னட படங்களில் நடிக்க மாட்டேன்Õ என அறிவித்தார். சீனியர் நடிகர் அம்பரீஷ் தலையிட்டு இப்பிரச்னைக்கு தீர்வு கண்டார். இதையடுத்து தனது முடிவை மாற்றிக்கொண்டார் திவ்யா.
தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்னையின்போது திவ்யாவுக்கு பக்கபலமாக நின்றவர் மற்றொரு பட அதிபர் முனிரத்னா. 'டைரக்டர்Õ என்ற பெயரில் தான் தயாரிக்கும் படத்தில் திவ்யா நடிக்கப்போவதாக கூறினார். அந்த செய்தியை பார்த்த திவ்யா கோபம் அடைந்துள்ளார். Ô'முனிரத்னா தயாரிக்கும் படத்தில் நடிப்பதுபற்றி என்னிடம் யாரும் பேசாதபோது நான் நடிப்பதாக எப்படி கூறலாம்ÕÕ என்றார்.
தயாரிப்பாளர் முனிரத்னாதான் இப்படி தகவல் தந்ததாக தெரிந்ததும் உடனே அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட திவ்யா, 'Ôஎன்னிடம் கதை சொல்லவில்லை, கால்ஷீட் வாங்கவில்லை. அப்படியிருக்கும்போது உங்கள் படத்தில் நான்  நடிப்பதாக எப்படி கூறலாம்ÕÕ என்று கோபமாக கேட்டுவிட்டு இணைப்பை துண்டித்தாராம். இதை கேட்டு அரண்ட தயாரிப்பாளர், 'Ôதிவ்யாவுடனான நட்பால் கொஞ்சம் சுதந்திரம் எடுத்துக்கொண்டேன். விரைவில் திவ்யாவை சந்தித்து என் படத்தில் நடிக்க கால்ஷீட் பெறுவேன்ÕÕ என்று நிலைமையை சமாளித்தார்.

 

Post a Comment