7/15/2011 3:18:03 PM
'பார்த்தோம் பழகினோம்’ பட இயக்குனர் ராசு மதுரவன் கூறியது: 'பூ மகள் ஊர்வலம்’, 'பாண்டி’, 'மாயாண்டி குடும்பத்தார்’, 'கோரிப்பாளையம்’, 'முத்துக்கு முத்தாக’ படங்களையடுத்து 'பார்த்தோம் பழகினோம்’ படத்தை இயக்குகிறேன். பள்ளி பருவத்தில் என்னுடன் படித்த நண்பன், பெண்கள் பின்னால் சுற்றுவான். அப்படி சுற்றியவர்களில் ஒரு பெண் இவனை உயிருக்கு உயிராக காதலித்தாள். அந்த காதலி அதிசயமான ஒரு முடிவை எடுத்தாள். அந்த சம்பவமே கதையாக உருவாகி இருக்கிறது. அன்பு ஹீரோ, ஜோஸ்னா ஹீரோயின். 'ஜித்தன்’ ரமேஷுக்கு முக்கிய வேடம். எனது படங்களில் குடும்ப உறவுகளை அதிகம் அலசுவேன். இதனால் கடந்த 3 படங்களில் நட்சத்திர கூட்டம் அதிகம் பேர் இடம்பெற்றனர். எல்லா கதைக்கும் நட்சத்திர கூட்டம் என்பது கட்டாயமில்லை. 'பார்த்தோம் பழகினோம்’ படத்தில் நட்சத்திர கூட்டம் குறைவுதான்.
Post a Comment