காஞ்சிபுரம், தசாவதாரம் போன்ற படங்களில் நடித்த இளம் நடிகை ஷம்மு, நடிப்புக்கு குட் பை சொல்லி, அமெரிக்கா பறக்கவுள்ளார்.
'காஞ்சிவரம்' படத்தில் அறிமுகமானவர் நடிகை ஷம்மு. 'மலையன்', 'மாத்தி யோசி' உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தார்.
அவர் நடித்துள்ள 'மயிலு', 'பாலை' படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இந் நிலையில் சினிமாவில் நடிப்பதை இத்துடன் நிறுத்தப் போவதாகவும் மேற்கொண்டு மருத்துவம் படிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதற்காக அமெரிக்கா செல்கிறார் ஷம்மு.
இது குறித்து ஷம்முவிடம் கேட்டபோது, "அடிப்படையில் நான் ஒரு தமிழ்ப் பெண். அமெரிக்காவில்தான் படித்து வளர்ந்தேன். டாக்டர் படிப்பை பாதியிலேயே நிறுத்தி சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து விட்டேன். அங்கு புளோரிடா மகாணத்தில் உள்ள 'யுனிவர்சிட்டி ஆஃப் சென்ட்ரல் புளோரிடா' பல்கலைக்கழகத்தில் மீண்டும் என் படிப்பைத் தொடரப் போகிறேன்.
அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்த நான், சினிமாவுக்கு வந்ததது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வு. நல்ல பட வாய்ப்புகள் கிடைத்தன. தேசிய விருது பெற்ற 'காஞ்சிவரம்' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தது பெருமைக்குரியது.
கமல்ஹாசன் படத்தில் நடித்தாலும், ஜோடியாக நடிக்காமல் போனதுதான் வருத்தமாக உள்ளது. மீண்டும் சினிமாவுக்கு வருவேனா? என்பதைக் காலம்தான் முடிவு செய்யும்," என்றார்.
'காஞ்சிவரம்' படத்தில் அறிமுகமானவர் நடிகை ஷம்மு. 'மலையன்', 'மாத்தி யோசி' உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தார்.
அவர் நடித்துள்ள 'மயிலு', 'பாலை' படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இந் நிலையில் சினிமாவில் நடிப்பதை இத்துடன் நிறுத்தப் போவதாகவும் மேற்கொண்டு மருத்துவம் படிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதற்காக அமெரிக்கா செல்கிறார் ஷம்மு.
இது குறித்து ஷம்முவிடம் கேட்டபோது, "அடிப்படையில் நான் ஒரு தமிழ்ப் பெண். அமெரிக்காவில்தான் படித்து வளர்ந்தேன். டாக்டர் படிப்பை பாதியிலேயே நிறுத்தி சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து விட்டேன். அங்கு புளோரிடா மகாணத்தில் உள்ள 'யுனிவர்சிட்டி ஆஃப் சென்ட்ரல் புளோரிடா' பல்கலைக்கழகத்தில் மீண்டும் என் படிப்பைத் தொடரப் போகிறேன்.
அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்த நான், சினிமாவுக்கு வந்ததது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வு. நல்ல பட வாய்ப்புகள் கிடைத்தன. தேசிய விருது பெற்ற 'காஞ்சிவரம்' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தது பெருமைக்குரியது.
கமல்ஹாசன் படத்தில் நடித்தாலும், ஜோடியாக நடிக்காமல் போனதுதான் வருத்தமாக உள்ளது. மீண்டும் சினிமாவுக்கு வருவேனா? என்பதைக் காலம்தான் முடிவு செய்யும்," என்றார்.
Post a Comment