7/15/2011 12:18:20 PM
ஜெயா டிவியில் ஒளிப்பராகும் ஜாக்பாட் ஷோவில் நதியா நடத்தி வந்தார். இந்நிலையில் நதியாவுக்கு கல்தா கொடுக்க ஜெயா நிர்வாகம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது. நமிதா தொடங்கி பல பேர் அலசப்பட்டனர். இறுதியாக பெங்களூருவில் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் பூஜாவை பிடித்திருக்கிறார்கள். பூஜாஇலங்கையைச் சேர்ந்தவர். சீமானின் தம்பியில் நடித்த போது தமிழை சிறப்பாக கற்றுக் கொண்டார். சிங்களப் பெண்ணை எப்படி சீமான் தனது படத்தில் நடிக்க வைக்கலாம் என்று பூஜாவால் சீமானுக்கு எதிர்ப்புகளும் கிளம்பின. பூஜா சிங்களப் படத்தில் நடிக்கயிருக்கிறார் என்ற செய்தி தமிழகத்தில் ஆத்திர அலைகளை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் முடிவு கட்டியிருக்கிறது ஜெயா தொலைக்காட்சியின் நிர்வாகம்.
Post a Comment