ரஜினியின் படங்களுக்கு விளம்பரம் தேவையில்லை. அவர் பெயரே அவருடைய படங்களுக்கு மிகப்பெரிய விளம்பரம், என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
படங்களுக்கு செய்யப்படும் விளம்பர நிகழ்ச்சிகள் குறித்து சமீபத்தில் தனது பிளாக்கில் இதுகுறித்து அமிதாப் எழுதியுள்ளதாவது:
"திரைப்படங்களை உருவாக்குவது மட்டுமல்லாது அதனை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது தான் மிக மிக முக்கியம். இன்றைய படங்கள் வெளியான ஒரு வாரத்திற்குள், அதனை வெற்றிப்படமாக்க வேண்டுமா இல்லையா என்பதை ரசிகர்கள் தீர்மானித்து விடுகிறார்கள்.
வர்த்தக ரீதியான வெற்றியே ஒரு படத்தின் அளவுகோலாக கருதப்படுகிறது. அதற்கு விளம்பரம் மிக மிக அவசியமான ஒன்றாகிவிட்டது. ஆனால் இந்த வரையறைக்குள் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் ஒருபோதும் வந்ததில்லை.
அவருடைய படத்தை விளம்பரங்கள் மூலம் பிரபலப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. அவரே, அவருடைய படத்துக்கு ஒரு மிகப்பெரிய விளம்பரம்.
'ஏன் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிக்கு நீங்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? அப்படி செய்வது உங்களை நீங்களே உங்களை விற்பனை செய்வது போன்றது என என்னிடம் ஒரு முறை கூறினார். உடனே நாங்கள் இருவரும் சிரித்தோம். பின்னர் இது பற்றி ரஜினியிடம் விளக்கி கூறினேன்," என்று எழுதியுள்ளார் அமிதாப்.
படங்களுக்கு செய்யப்படும் விளம்பர நிகழ்ச்சிகள் குறித்து சமீபத்தில் தனது பிளாக்கில் இதுகுறித்து அமிதாப் எழுதியுள்ளதாவது:
"திரைப்படங்களை உருவாக்குவது மட்டுமல்லாது அதனை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது தான் மிக மிக முக்கியம். இன்றைய படங்கள் வெளியான ஒரு வாரத்திற்குள், அதனை வெற்றிப்படமாக்க வேண்டுமா இல்லையா என்பதை ரசிகர்கள் தீர்மானித்து விடுகிறார்கள்.
வர்த்தக ரீதியான வெற்றியே ஒரு படத்தின் அளவுகோலாக கருதப்படுகிறது. அதற்கு விளம்பரம் மிக மிக அவசியமான ஒன்றாகிவிட்டது. ஆனால் இந்த வரையறைக்குள் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் ஒருபோதும் வந்ததில்லை.
அவருடைய படத்தை விளம்பரங்கள் மூலம் பிரபலப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. அவரே, அவருடைய படத்துக்கு ஒரு மிகப்பெரிய விளம்பரம்.
'ஏன் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிக்கு நீங்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? அப்படி செய்வது உங்களை நீங்களே உங்களை விற்பனை செய்வது போன்றது என என்னிடம் ஒரு முறை கூறினார். உடனே நாங்கள் இருவரும் சிரித்தோம். பின்னர் இது பற்றி ரஜினியிடம் விளக்கி கூறினேன்," என்று எழுதியுள்ளார் அமிதாப்.
Post a Comment