ஈசிஆர் ரோட்டில் 5 கிரவுண்டில் சொகுசு பங்களா கட்டியுள்ள ரம்யா கிருஷ்ணன்

|


பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன். நாயகி வேடத்தில் நடித்து ஓய்ந்து மார்க்கெட் போன பின்னர், அம்மன் வேடமா கூப்பிடு ரம்யா கிருஷ்ணனை என்று சொல்லும் அளவுக்கு பிரபலமானவர். பாளையத்து அம்மன், ராஜகாளியம்மன் வேடங்களி்ல் நடித்த அவர் தற்போது மதுரை மீனாட்சி அம்மன் வேடத்திலும் நடிக்கிறார்.

இந்த நிலையில் தற்போது ஈசிஆர் சாலையில் சொகுசு பங்களா கட்டியுள்ளாராம் ரம்யா. அமைதியான சூழலில் வசிக்க விருப்பம் கொண்டு இந்த பங்களாவைக் கட்டியுள்ளாராம்.

5 கிரவுண்ட் நிலத்தில் சொகுசு பங்களா கட்டியுள்ளார். அந்த பங்களாவைச் சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமரா கண்காணிப்பு தவிர காவலாளிகளும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சொகுசு பங்களான்னா சும்மாவா? கண்காணிப்பு பலமா இருக்கனுமே!
 

Post a Comment