தாங்கள் தயாரித்துள்ள ஜன் லோக்பால் மசோதாவை எந்த மாறுதலும் இல்லாமல் அப்படியே அரசு ஏற்க வேண்டும் என்று கோரி அன்னா ஹஸாரே டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
அவரை ஆதரித்து ஆங்காங்கே சாலைகளில் திடீர் திடீரென ஊர்வலம் போவதும் உண்ணாவிரதம் இருப்பதும் நடக்கிறது. இது பொதுமக்களைக் கடுமையாக பாதிக்க ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் சினிமாக்காரர்களும் தங்கள் பங்குக்கு ஹஸாரேவை ஆதரித்து ஊர்வலம் உண்ணாவிரதம் என பரபரப்பு கிளப்பி வருகின்றனர்.
பாலிவுட், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகினர் இதுவரை ஊர்வலம் நடத்தி முடித்துவிட்டனர். இப்போது தமிழ் திரையுலகினர் தங்கள் பங்குக்கு உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் சார்பில் இந்த உண்ணாவிரதம் நடக்கிறது.
பிலிம்சேம்பர் வளாகத்தில் நடைபெற உள்ள இந்த போராட்டத்தில் கவுன்சில் தலைவர் எஸ்ஏ சந்திரசேகரன், நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராம நாதன் இயக்குனர் சேரன், திரைப்பட தொழிலாளர் சங்க செயலாளர் சிவா, விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன் போன்றோர் தலைமையில் பெரும் திரளான திரையுலகினர் பங்கேற்கின்றனர்.
இந்தத் தகவலை தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் நேற்று தெரிவித்தார்.
Post a Comment