இயக்குநர் பாரதி ராஜா தனது அடுத்த படத்துக்கு இசையமைப்பாளராக ஜீவி பிரகாஷ் குமாரை ஒப்பந்தம் செய்துள்ளார்.
பொம்மலாட்டம் படத்துக்குப் பிறகு பாரதிராஜா இயக்கும் படம் அன்னக் கொடியும் கொடிவீரனும்.
இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைப்பார் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் ரஹ்மான் இசையமைப்பதாக தகவல்கள் வெளியாகின.
இப்போது, பாரதிராஜா இந்த இருவரையும் விட்டு, ஜீவி பிரகாஷுடன் கூட்டணி அமைத்துள்ளது தெரியவந்துள்ளது. படத்துக்கான பாடல் கம்போஸிங்கை ஏற்கெனவே ஜீவி பிரகாஷ் தொடங்கிவிட்டார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "பாரதிராஜா ஒரு சாதனையாளர். தமிழ் சினிமாவின் தலையாய இயக்குநர். அவர் என்னை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருப்பது எனக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம். ஒரு இசையமைப்பாளிரிடமிருந்து சிறந்த பாடல்களை வாங்குவது அவரது ஸ்டைல். அந்த அனுபவத்துக்காக காத்திருக்கிறேன்," என்றார்.
பொம்மலாட்டம் படத்துக்குப் பிறகு பாரதிராஜா இயக்கும் படம் அன்னக் கொடியும் கொடிவீரனும்.
இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைப்பார் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் ரஹ்மான் இசையமைப்பதாக தகவல்கள் வெளியாகின.
இப்போது, பாரதிராஜா இந்த இருவரையும் விட்டு, ஜீவி பிரகாஷுடன் கூட்டணி அமைத்துள்ளது தெரியவந்துள்ளது. படத்துக்கான பாடல் கம்போஸிங்கை ஏற்கெனவே ஜீவி பிரகாஷ் தொடங்கிவிட்டார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "பாரதிராஜா ஒரு சாதனையாளர். தமிழ் சினிமாவின் தலையாய இயக்குநர். அவர் என்னை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருப்பது எனக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம். ஒரு இசையமைப்பாளிரிடமிருந்து சிறந்த பாடல்களை வாங்குவது அவரது ஸ்டைல். அந்த அனுபவத்துக்காக காத்திருக்கிறேன்," என்றார்.
Post a Comment