8/1/2011 4:28:48 PM
ரஜினியின் 'ராணா' படத்துக்கு எந்த நேரத்திலும் கால்ஷீட் தரத் தயார் என்று கூறிய தீபிகா படுகோன் பாலிவுட்டில் அடுத்தடுத்து படங்களை ஒப்புக்கொண்டிருக்கிறார். அயன் முகர்ஜி இயக்க ரன்பீர் கபூர் நடிக்கும் படத்தில் கேத்ரினா கைப் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆனார். நவம்பர் மாதம் ஷூட்டிங் போக ஒப்புக்கொண்டிருந்தார். இப்படத்துக்கு கால்ஷீட் தந்த அதே நேரத்தில் யாஷ் சோப்ரா இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்துக்கும் கால்ஷீட் தந்தார்.
இதனால் பிரச்னை எழுந்தது. ஏற்கனவே அயன் முகர்ஜி படத்துக்கு இதே மாதத்தில் கால்ஷீட் கொடுத்திருப்பதாக கூறியும் யாஷ் சோப்ரா கண்டுகொள்ளவில்லை. கொடுத்த தேதியில் ஷூட்டிங் வந்தாக வேண்டும் என்றார். தர்மசங்கடத்தில் ஆழ்ந்த கேத்ரினா ஒருவழியாக அயன் முகர்ஜி படத்திலிருந்து விலக முடிவு செய்தார். இந்த தகவல் தீபிகா படுகோனுக்கு தெரியவர, இயக்குனருக்கு தூது விட்டார். இயக்குனரும் ஓகே சொல்ல உடனடியாக கால்ஷீட் கொடுத்தார். ஹீரோ ரன்பீர், தீபிகாவின் முன்னாள் பாய் பிரெண்ட். ஆனாலும் அவருடன் நடிப்பதில் எந்த ப¤ரச்னையும் இல்லை என்று கூறி நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் தீபிகா.
Post a Comment