தமிழில் மீண்டும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் விஷால் ஜோடியாக நடிக்கிறார் த்ரிஷா.
இந்தப் படத்தை திரு இயக்குகிறார்.
இந்தப் படம் முடிவானபோதே, ஹீரோயினாக த்ரிஷா நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று விஷால் பிரியப்பட்டார். அவரை அணுகி கால்ஷீட் கேட்டனர். கதை முழுக்க கேட்ட திரிஷாவுக்கும் பிடித்து போனது. விஷால் ஜோடியாக நடிக்க சம்மதம் தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே ‘சத்யம்’ படத்தில் விஷால் ஜோடியாக நடிக்க முதலில் த்ரிஷாவிடம்தான் கேட்டனர். அவர் மறுத்ததால் நயன்தாரா நடித்தார். ‘தோரணை’, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ தற்போது விஷால் நடித்து வரும் ‘வெடி’ என எல்லா படங்களுக்கும் த்ரிஷாவைதான் நாயகியாக நடிக்கும்படி கேட்டனர்.
ஆனால் விஷாலுடன் ஜோடி சேர அவர் விரும்பாததால் தவிர்த்து வந்தார். தற்போது மனமாற்றம் ஏற்பட்டு புதிய படத்தில் ஜோடி சேர சம்மதம் தெரிவித்து உள்ளார். இந்த வாரம் இறுதியில் இப்படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் திரிஷா கையெழுத்திடுகிறார்.
இதன் மூலம் தனது கல்யாணப் பேச்சுக்களுக்கு த்ரிஷா தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Post a Comment