திருச்செந்தூர் அருகே தேரிக் குடியிருப்பில் படப்பிடிப்பு நடந்தபோது மணல்புயலில் சிக்கினார் நடிகை கஸ்தூரி.
முன்னாள் ஹீரோயினான கஸ்தூரி இப்போது குணச்சித்திர வேடத்துக்கு மாறிவிட்டார். குத்தாட்டமும் போட்டு வருகிறார்.
தற்போது கிரீன் டூ சினிமா என்னும் பட நிறுவனம் அழகன் அழகி என்ற படத்தை தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு திருச்செந்தூர் அருகில் உள்ள தேரி குடியிருப்பில் செம்மண் வெளியில் நடந்தது. கஸ்தூரி கவர்ச்சி நடனம் ஆடுவது போன்ற பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டது.
வெயில் அதிகமாக இருந்தும் தொடர்ந்து 4 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. 4வது நாள் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென்று மணல் புயல் வீசியது. கஸ்தூரி உள்பட படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் மணல் புயலில் சிக்கினார்கள். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
முன்னாள் ஹீரோயினான கஸ்தூரி இப்போது குணச்சித்திர வேடத்துக்கு மாறிவிட்டார். குத்தாட்டமும் போட்டு வருகிறார்.
தற்போது கிரீன் டூ சினிமா என்னும் பட நிறுவனம் அழகன் அழகி என்ற படத்தை தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு திருச்செந்தூர் அருகில் உள்ள தேரி குடியிருப்பில் செம்மண் வெளியில் நடந்தது. கஸ்தூரி கவர்ச்சி நடனம் ஆடுவது போன்ற பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டது.
வெயில் அதிகமாக இருந்தும் தொடர்ந்து 4 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. 4வது நாள் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென்று மணல் புயல் வீசியது. கஸ்தூரி உள்பட படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் மணல் புயலில் சிக்கினார்கள். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
Post a Comment