நடிகை ரம்பா தனது குழந்தையுடன் திருப்பதி கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டார்.
கனடாவைச் சேர்ந்த இலங்கைத் தொழிலதிபரான இந்திரனுக்கும், நடிகை ரம்பாவுக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பதியில் வைத்துத் திருமணம் நடந்தது. அதன் பின்னர் கணவருடன் இனிய இல்லறத்தைத் தொடங்கினார் ரம்பா. இதன் விளைவாக அவர் கர்ப்பமானார்.
கடந்த ஜனவரியில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. கனடாவில் பிறந்த இக்குழந்தைக்கு லன்யா என அழகிய பெயரைச் சூட்டியுள்ளனர் ரம்பா, இந்திரன் தம்பதியினர்.
இந்த நிலையில் தனது குழந்தையுடன் ரம்பா திருப்பதிக்கு வந்தார். அங்கு தனது குழந்தையுடன் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். சிறப்பு அபிஷேகமும் செய்தார்.
திடீர் திருப்பதி விஜயம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, நல்லபடியாக சுகப்பிரசவம் நடந்தால் குழந்தையுடன் வந்து சாமி கும்பிடுவதாக நேர்ந்திருந்தேன். அதன்படி நல்லபடியாக பிரசவம் நடந்ததால் வந்து சாமி கும்பிட்டுச் செல்கிறேன் என்றார்.
மீண்டும் சினிமாவில் நடிப்பீர்களா என்று கேட்டபோது, கல்யாணத்துக்குப் பின்னர் நடிக்கவில்லை. இருந்தாலும் நல்ல படங்கள் கிடைத்தால் நடிப்பேன் என்றார்.
கனடாவைச் சேர்ந்த இலங்கைத் தொழிலதிபரான இந்திரனுக்கும், நடிகை ரம்பாவுக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பதியில் வைத்துத் திருமணம் நடந்தது. அதன் பின்னர் கணவருடன் இனிய இல்லறத்தைத் தொடங்கினார் ரம்பா. இதன் விளைவாக அவர் கர்ப்பமானார்.
கடந்த ஜனவரியில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. கனடாவில் பிறந்த இக்குழந்தைக்கு லன்யா என அழகிய பெயரைச் சூட்டியுள்ளனர் ரம்பா, இந்திரன் தம்பதியினர்.
இந்த நிலையில் தனது குழந்தையுடன் ரம்பா திருப்பதிக்கு வந்தார். அங்கு தனது குழந்தையுடன் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். சிறப்பு அபிஷேகமும் செய்தார்.
திடீர் திருப்பதி விஜயம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, நல்லபடியாக சுகப்பிரசவம் நடந்தால் குழந்தையுடன் வந்து சாமி கும்பிடுவதாக நேர்ந்திருந்தேன். அதன்படி நல்லபடியாக பிரசவம் நடந்ததால் வந்து சாமி கும்பிட்டுச் செல்கிறேன் என்றார்.
மீண்டும் சினிமாவில் நடிப்பீர்களா என்று கேட்டபோது, கல்யாணத்துக்குப் பின்னர் நடிக்கவில்லை. இருந்தாலும் நல்ல படங்கள் கிடைத்தால் நடிப்பேன் என்றார்.
Post a Comment