முன்பெல்லாம் சுமாரான படம் கூட நூறு நாட்களைக் கடந்து ஓடியது. நல்ல படங்கள் வெள்ளி விழா கண்டன.
ஆனால் இன்று மக்கள் மனம் மாற்றுப் பொழுதுபோக்குகளில் லயித்துவிட்டதால், அனைத்து வகையிலும் சிறந்த படமாக இருந்தால் மட்டுமே இப்போது 50 நாட்களையாவது ஒரு படம் தொடும் நிலை உள்ளது.
அந்த வகையில், சமீபத்தில் வெளியாகி, பெண்கள் உள்ளிட்ட குடும்ப ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற படம் தெய்வத் திருமகள். விக்ரம், அனுஷ்கா, சந்தானம், அமலாபால் நடித்துள்ள இந்தப் படத்தை மோகன் நடராஜன் தயாரித்துள்ளார்.
காட்சிக்குக் காட்சி இந்தப் படம் ஒரு ஆங்கிலப் படத்தின் உல்டா என்றாலும் கூட, தமிழில் அதை இயக்குநர் விஜய் கொடுத்திருந்த விதம் இதயத்தைத் தொட்டது.
இதனால் படம் அனைத்து சென்டர்களிலும் சிறப்பாக ஓடி 50 நாட்களைக் கடந்துள்ளது.
சென்னை நகரில் மட்டும் ரூ 3.75 கோடி வசூலைப் பெற்றுள்ளது இந்தப் படம். விக்ரம் நடித்த படங்களில் சென்னையில் அதிக வசூலைக் குவித்த படம் என்றால் அது தெய்வத் திருமகள்தான் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில்!
ஆனால் இன்று மக்கள் மனம் மாற்றுப் பொழுதுபோக்குகளில் லயித்துவிட்டதால், அனைத்து வகையிலும் சிறந்த படமாக இருந்தால் மட்டுமே இப்போது 50 நாட்களையாவது ஒரு படம் தொடும் நிலை உள்ளது.
அந்த வகையில், சமீபத்தில் வெளியாகி, பெண்கள் உள்ளிட்ட குடும்ப ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற படம் தெய்வத் திருமகள். விக்ரம், அனுஷ்கா, சந்தானம், அமலாபால் நடித்துள்ள இந்தப் படத்தை மோகன் நடராஜன் தயாரித்துள்ளார்.
காட்சிக்குக் காட்சி இந்தப் படம் ஒரு ஆங்கிலப் படத்தின் உல்டா என்றாலும் கூட, தமிழில் அதை இயக்குநர் விஜய் கொடுத்திருந்த விதம் இதயத்தைத் தொட்டது.
இதனால் படம் அனைத்து சென்டர்களிலும் சிறப்பாக ஓடி 50 நாட்களைக் கடந்துள்ளது.
சென்னை நகரில் மட்டும் ரூ 3.75 கோடி வசூலைப் பெற்றுள்ளது இந்தப் படம். விக்ரம் நடித்த படங்களில் சென்னையில் அதிக வசூலைக் குவித்த படம் என்றால் அது தெய்வத் திருமகள்தான் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில்!
Post a Comment