சன் பிக்சர்ஸ் சிஓஓவாக செம்பியன் நியமனம்!

|


சன் பிக்சர்ஸ் சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்சேனா பல்வேறு சட்டப் பிரச்சினைகளில் சிக்கித் தவித்து வரும் இந்த சூழலில், நிறுவனத்தை புதிய வேகத்துடன் நடத்த புதிய சிஓஓவாக செம்பியனை நியமித்துள்ளது சன் நிர்வாகம்.

பிரபல தயாரிப்பாளரும்புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு நெருக்கமானவருமான கோவை செழியனின் மகன் செம்பியன் சிவகுமார். சன் குழுமத்தின் மலையாள சேனல் சூர்யா டிவி, எஸ்சிவி மற்றும் சூரியன் எப்எம் ஆகியவற்றை நிர்வகித்து வந்தார்.

இப்போது, சன் பிக்சர்ஸ் நெருக்கடியான சூழலில் இருப்பதால், சக்சேனாவுக்கு பதிலாக அந்தப் பொறுப்பில் செம்பியனை நியமித்துள்ளது சன் நிர்வாகம்.

தனது நியமனம் குறித்து செம்பியன் கூறுகையில், "மீண்டும் பழைய உத்வேகத்தோடு களமிறங்குகிறோம். வருகின்ற நாட்களெல்லாம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு சிறப்பான நாட்களாக அமையப் போகின்றன. இப்போது சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள மங்காத்தா சூப்பர் ஹிட்டாகிவிட்டது. அடுத்து சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தை வெளியிடுகிறது சன் பிக்சர்ஸ். இன்னும் நிறைய பெரிய படங்கள் சன் வசம் வருகின்றன," என்றார்.
 

Post a Comment