ஜெயம் ரவி பிறந்தநாள்... ரசிகர்கள், நடிகர்கள் வாழ்த்து!

|


நடிகர் ஜெயம் ரவி இன்று தனது பிறந்த நாளை சென்னையில் கொண்டாடினார். அவருக்கு சக, நடிக நடிகைகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

இளம் நடிகர்களில் எந்த போட்டியிலும் இல்லாத, தனக்கென தனி பாணியை வைத்துள்ள நடிகர் ஜெயம் ரவி. தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து வருபவர்.

இப்போது அமீரின் ஆதி பகவன் படத்தில் நடித்துவரும் அவர், அடுத்ததாக எஸ்பி ஜனநாதன் இயக்கும் படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடிக்கிறார்.

இன்று தனது பிறந்த நாளை குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் கொண்டாடினார் ஜெயம் ரவி.

அவருக்கு நடிகர் நடிகைகள் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இதுகுறித்து ஜெயம் ரவி கூறுகையில், "பிறந்த நாளின் போது அனைவரது வாழ்த்துக்களையும் கேட்பது சந்தோஷமாக உள்ளது. நிறைய சாதிக்க வேண்டும் என்ற வேகத்தை ஏற்படுத்துகிறது. ரசிகர்கள் நிறைய பேர் எனக்கு இன்று வாழ்த்து சொன்னார்கள். அவர்கள் அனைவருக்கும் எப்படி நன்றி சொல்வது? நல்ல படத்தைத் தருவேன். இதுதான் நான் செலுத்தும் நன்றி," என்றார்.
 

Post a Comment